விராட் கோலி நெஞ்சில் சாய்ந்த வில்லியம்சன்… இறுதிப்போட்டி குறித்து மனம் திறந்த பேட்டி!

சவுதாம்படனில் நடைபெற்ற உலகக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியை நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தனது பவுண்டரியோடு அசத்தலாக முடித்து வைத்தார். அந்த பவுண்டரியை அடுத்து ஒட்டுமொத்த நியூசிலாந்து வீரர்களும் காலரியில் அமர்ந்து ஆரவாரம் செய்தனர். ஆனால் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் எதிர் அணியான இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் நெஞ்சில் போய் பக்குவமாகப் படுத்துக் கொண்டார்.

இந்தக் காட்சிகளைப் பார்த்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். வில்லியம்சன் மிகவும் மென்மையான மனிதர் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களும் அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் இந்நிகழ்வு குறித்து மனம் திறந்த வில்லியம்சன் தற்போது, நான் ராஸ் டெய்லருடன் வெற்றியைக் கொண்டாடாமல் விராட் கோலியின் நெஞ்சில் சாய்ந்து கொண்டது குறித்து கேள்வி எழுப்புகிறீர்கள்.

அவர் எதிர்அணி கேப்டன் என்பதைத்தவிர எனக்கும் விராட் கோலிக்குமான உறவு பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்பட்டது. கிரிக்கெட்டையும் கடந்து ஒரு ஆழமான நட்பு எங்களுக்குள் இருக்கிறது அது இருவருக்குமே தெரியும் என நெகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியோடு உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சந்தித்தோம். அதில் வெற்றிப்பெற்ற அந்தத் தருணம் மிகச் சிறந்தது. இந்தியாவுடன் எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் அது மிகவும் கடினமானதாக இருக்கும். நெருக்கடி அதிகமாக இருக்கும். அதனால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ராஸ் டெய்லருடன் கொண்டாடாமல் நான் விராட் கோலியுடன் கொண்டாடினேன் என மகிழ்ச்சிப் பொங்க தெரிவித்து உள்ளார்.

மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருககான உலகக் கோப்பை தொடரில் கோலியும் வில்லியம்சனும் எதிர் எதிர் அணியில் விளையாடி உள்ளனர். அதோடு அந்தத் தொடரின் செமிஃபைனல் போட்டியில் விராட் கோலிதான் வில்லியம்சை அவுட்டாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பல வருடங்களாகவே விராட் கோலிக்கும் வில்லியம்சனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்ததை அவர் தற்போது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

More News

ஜாதித்தீவாக மாறும் சென்னை ஐஐடி....! வேலையை ரிசைன் செய்வதாக பேராசிரியர் கடிதம்...!

நாட்டில் மாபெரும் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐ.ஐ.டி கருதப்படுகிறது. இங்கு பணிபுரிய வேண்டும் என்றும், படிக்கவேண்டும் என்பதும் பலரின் கனவாகவே இருந்து வருகிறது.

19 வருட உலகச் சாதனையை முறியடித்த இந்தியச் சிறுவன்… செஸ்ஸில் இன்னொரு புது வரவு!

செஸ் விளையாட்டிற்குப் பெயர்போன விஸ்வநாதன் ஆன்ந்த் இந்தியாவை சேர்ந்தவர் என்ற முறையில் நாம் பெருமைப்பட்டு கொள்கிறோம்.

10 வருடமா கல்லறைக்கு விசிட் அடிக்கும் பெண்மணி? விசித்திரம் கொண்ட அதன் பின்னணி!

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் 48 வயதான பெண்மணி ஒருவர் கடந்த 10 வருடங்களாகத் தொடர்ந்து ஒவ்வொரு

தேசிய மருத்துவர்கள் தினத்தில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்… வெடிக்கும் சர்ச்சை!

ஒடிசாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரை உணவு கொடுக்க சென்ற தாபாவின் ஊழியர்

தமிழகஅரசு கையால் விருது வாங்கிய காப்பகம்… குழந்தையை காசுக்கு விற்றது அம்பலம்!

மதுரையில் உள்ள தனியார் ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றில் வளர்ந்து வந்த 1 வயது ஆண்