காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்.

  • IndiaGlitz, [Wednesday,February 28 2018]

காஞ்சி சங்கராச்சாரியார் என்று அழைக்கப்படும் ஜெயெந்திர சரஸ்வதி அவர்கள் சற்றுமுன்னர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இன்று காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் சங்கரமடம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி ஜெயேந்திரர் மரணம் அடைந்ததை அடுத்து அவருடைய பக்தர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். காஞ்சி சங்கரர் மறைவு குறித்து கருத்து கூறிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, 'காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

காஞ்சி சங்கரரை நேற்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் சந்தித்து ஆசிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சூர்யா 36' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எஸ்.ஆர்.பிரபு

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில் அவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

என்பார்மிங் முடிந்தது: துபாய் விமான நிலையத்தில் ஸ்ரீதேவி உடல்

துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவி உடல் துபாய் போலீசாரின் அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் முடிந்துவிட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கவுதமி சம்பள பாக்கி குறித்து கமல் கருத்து

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், அதற்கான சம்பளத்தை கமல்ஹாசனின் நிறுவனம் தனக்கு தரவில்லை என்றும் சமீபத்தில் கவுதமி புகார் கூறியிருந்தார்.

ரஷ்ய தொழிலதிபருடன் ரஜினி-விஜய் நாயகிக்கு திருமணம்

பிரபல தென்னிந்திய நடிகையும், ரஜினி, விஜய், தனுஷ் உள்பட முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டவருமான நடிகை ஸ்ரேயாவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. அவருக்கு நமது அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்

ஸ்ரீதேவி மரணம் குறித்து சந்தேகம் எழுப்பும் சுவாமி

ஸ்ரீதேவி மரணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.