என்னையும் ரஜினியையும் அரசியல் நிச்சயம் பிரிக்கும்: கமல்

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

திரையுலகில் நண்பர்களாக இருந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியல் களத்தில் ஒரே நேரத்தில் இறங்கியிருந்தாலும் இருவரும் வெவ்வெறு பாதைகளில் பயணம் செய்கின்றனர். ரஜினி ஆன்மீக அரசியலும் கமலின் பகுத்தறிவு மற்றும் திராவிட அரசியலும் முற்றிலும் நேரெதிர் பாதையில் செல்லும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், அரசியல் வருகை காரணமாக ரஜினிக்கும் எனக்கும் இடையே இனி வரும் காலங்களில் நிச்சயமாக பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும், எங்கள் இருவரின் திரைப்படங்களின் பாணியே முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் நிலையில் அரசியலும் அதேபோல் தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதே கருத்தை கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் கட்சி ஆரம்பிக்கும் முன் ரஜினியை சந்தித்தபோது செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது: சினிமாவிலேயே என்னுடைய பாணி வேறு, கமல்ஹாசனின் பாணி வேறு. அதேபோல் தான் அரசியலிலும் இருக்கும். இருந்தாலும் இருவருக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே உள்ளது' என்று கூறியிருந்தார்.

எனவே இருவரின் கூற்றுக்களை பார்க்கும்போது இதுவரை சினிமாவில் போட்டியாக இருந்த கமல், ரஜினி, இனிமேல் அரசியலில் போட்டியாளர்களாக இருப்பார்கள் என புரிந்து கொள்ள முடிகிறது.

More News

நிர்பயாவின் தாய் குறித்து முன்னாள் டிஜிபி சர்ச்சை கருத்து

'ஆஷா தேவிக்கு நல்ல உடலமைப்பு உள்ளது. அவரின் மகள் எந்த அளவிற்கு அழகாக இருந்திருப்பார் என்று எண்ணி பாருங்கள்' என்று பேசியபோதே மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.

'வேலைக்காரன்' சிவகார்த்திகேயனுடன் இணையும் 'பாஸ்' இயக்குனர்

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் 'வேலைக்காரன்' என்ற வெற்றி படத்தில் நடித்த நிலையில் தற்போது பொன்ராம் இயக்கி வரும் 'சீமராஜா' படத்தில் நடித்து கொண்டிருக்கின்றார்.

இரண்டே நாளில் உடைந்தது தினகரனின் 'அமமுக?

அமமுக என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி கட்சி நடத்த டிடிவி நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள் நான் இனிமேல் அதில் இல்லை

சூர்யாவை 10 நாடுகளுக்கு அழைத்து செல்லும் இயக்குனர்

சூர்யா 37 திரைப்படம் உலகின் முக்கிய 10 நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சிம்கார்டு இல்லாத செல்போனை பயன்படுத்துகிறாரா ப்ரியாவாரியர்?

ப்ரியா செல்போன் பயன்படுத்த அவரது தந்தை அனுமதிப்பதில்லை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.