கமல்ஹாசனுக்கு தமிழக அரசு திடீர் தடையா?

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

சென்னை அண்ணா பல்லைக்கழக வளாகத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ஒன்றை திடீரென பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக மைதானத்தில் 3 நாள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தனர். ஏற்கனவே 2 நாட்கள் கலைநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்துவிட்ட நிலையில் இன்று மூன்றாம் நாள் நிகழ்ச்சியை நடத்த அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கியிருந்த அனுமதியை திடீரென ரத்து செய்துள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பதாக இருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இந்த தடை இந்த நிகழ்ச்சிக்கா? அல்லது கமல்ஹாசனுக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது. . இந்நிலையில் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளை நடத்தத் திடீரெனப் பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

More News

வருங்கால கணவர் விக்கிக்கு நன்றி : நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்பட்டு வந்தாலும் இதுவரை இருவரும் இதுகுறித்து வெளிப்படையான அறிவிப்பை வெளியிடவில்லை.

திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்

கோலிவுட் திரையுலக நடிகர், நடிகைகள் திடீரென திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. சமீபத்தில் கூட நடிகை ஸ்ரேயாவின் ரகசிய திருமணம் குறித்த செய்தியை பார்த்தோம்

நட்சத்திர தம்பதியின் வாரிசு நடிகை படபூஜையில் பிரபலங்கள்

கடந்த 80ஆம் ஆண்டுகளின் தமிழ், தெலுங்கு திரையுலகின் நட்சத்திரன் ஜோடிகள் டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியினர் என்பது தெரிந்ததே

படப்பிடிப்பின்போது பிரபல நடிகைக்கு விபத்து! கண்களில் ரத்தம் வந்ததால் பரபரப்பு

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் படப்பிடிப்பின்போது காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கண்களில் இருந்து ரத்தம் வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

கள்ளக்காதலனின் உதவியால் அக்காவை கொலை செய்த கொடூர தங்கை

அக்கா கணவரின் சொத்துக்களை அடைய அக்காவை கொலை செய்ய கள்ளக்காதலனை ஏவிவிட்ட தங்கை ஒருவரின் வெறிச்செயல் திருப்பூர் பகுதியை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.