இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை: ஸ்ரீதேவி மரணம் குறித்து குறித்து கமல்

  • IndiaGlitz, [Sunday,February 25 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல்-கைமா நகரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் உள்ள முன்னணி திரையுலக பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்து பொருத்தமான திரை ஜோடி என்ற பெயர் உண்டாக காரணமானவர் உலகநாயகன் கமல்ஹாசன். கமல்ஹாசன், ஸ்ரீதேவி இணைந்து நடித்த 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்யாண ராமன், தாயில்லாமல் நானில்லை, குரு, வறுமையின் நிறம் சிகப்பு,  சங்கர்லால், மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் மறைவு குறித்து கமல் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: 'மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்' என்று கூறியுள்ளார்.

 

 

மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்

— Kamal Haasan (@ikamalhaasan) February 25, 2018

More News

தமிழ்நாட்டுகே ஒரு அபாய போர்டு வைக்க வேண்டும்: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அந்த கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தீவிர முயற்சியில் உள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை ஸ்ரீதேவி துபாயில் குடும்ப நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு கலந்து கொள்ள சென்றிருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 54

இறந்தது போல் நடித்து உயிர் பிழைத்தேன்: கொள்ளையர்களிடம் இருந்து தப்பிய மென்பொறியாளர் லாவண்யா

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மென்பொறியாளர் லாவண்யா, பணியை முடித்துவிட்டு இரவில் சென்னை பெரும்பாக்கத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்தபோது மூன்று கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார்.

நான் மீண்டும் திருமணம் செய்துகொள்கிறேன்: சன்னிலியோன் அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் பாலிவுட் திரைப்படங்களிலும் தமிழில் 'வீரமாதேவி' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

அருவி படத்தின் பட்ஜெட்டே ரூ.2 கோடிதான், ஆனால் விபிஎஃப்-க்கு? எஸ்.ஆர்.பிரபு வேதனை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவர்கள் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் எதனால்?