மனதைப் பிழியும் சோகம்: காட்டுத்தீ விபத்து குறித்து கமல்

  • IndiaGlitz, [Monday,March 12 2018]

தேனி அருகேயுள்ள மலைப்பகுதியான குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை, கமாண்டோ படை, தீயணைப்பு படை மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த தீவிபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலியானவர்களுக்கு இரங்கலும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதலும் பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: கருங்குணி. விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

 

More News

தல, தளபதி குறித்து சிம்பு கூறியது என்ன?

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக சமீபத்தில் கலந்து கொண்ட சிம்பு, தல அஜித் மற்றும் தளபதி விஜய் குறித்த தனது கருத்தை தெரிவித்தார்.

தேனி அருகே பயங்கர காட்டுத்தீ: 8 பேர் பலி, மீட்கப்பட்டவர்களின் விபரம்

தேனி அருகேயுள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட சுமார் 40 மாணவிகள் சிக்கி கொண்டனர்.

எல்.கே.ஜிக்கு ரூ.2 லட்சமா? இது என்னடா பகல் கொள்ளையா இருக்குது!

பெங்களூர் பள்ளி ஒன்று எல்.கே.ஜி படிப்பிற்கு ரூ.2லட்சத்து 2 ஆயிரம் தொகை வசூலிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ள கையேடு ஒன்று இணணயதளங்களில் வைரலாகி வருகிறது

ராகுல்காந்தி மனிதநேயம் மிக்கவர்: கமல்ஹாசன் பேட்டி

சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டி ஒன்றில் 'ராஜீவ் காந்தி கொலையாளிகளை தாமும் தன்னுடைய சகோதரியும் மன்னித்துவிட்டதாக கூறியிருந்தார்.

சசிகுமாரின் அடுத்த இரண்டாம் பாக படம்

நடிகர் சசிகுமார் ஏற்கனவே நாடோடிகள்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.