வெளியே வா பாத்துக்கலாம்: யாஷிகா-ஐஸ்வர்யாவை கலாய்த்த கமல்

  • IndiaGlitz, [Saturday,September 22 2018]

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா 'பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போனவுடன் இந்த மூணு பேரையும் கல்லால் அடிக்க வேண்டும் என்று விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஜனனியை குறிப்பிட்டார். அதற்கு ஐஸ்வர்யா, 'நான் கையில் என்ன கிடைத்தாலும் எடுத்து அடிப்பேன்' என்று கூறினார். இதனை கேட்டு யாஷிகா சிரித்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில் 'சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் வெளியே சென்று ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வார்களோ என்ற பயம் எனக்கு இருக்கு. ஏனென்றால் வெளியே சென்று இவர்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொள்வார்கள் என்று கூறி யாஷிகா, ஐஸ்வர்யாவை பார்த்து சிரித்தார். மேலும் மக்களும் அதையே சொல்லி கொண்டிருக்கின்றார்கள் என்று இருவரையும் கலாய்த்தார்.

ஏனெனில் நேற்றும் இன்றும் டுவிட்டரில் பலர், ஐஸ்வர்யா, யாஷிகா இருவரும் வெளியே வந்தால் அவர்களை கல்லால் அடிப்போம் என்றும், அவர்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பயங்கரமாக விமர்சனம் செய்வோம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

More News

தொழிலதிபரின் பேரனை காதலிக்கும் பிரபல நடிகரின் மகள்?

நடிகர் வெங்கடேஷ் மகள் அஷ்ரிதா கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவருக்கின்றது.

தல, தளபதி யாரை பிடிக்கும்? தயக்கமின்றி பதில் சொன்ன யுவன்

திரையுலக பிரமுகர்களிடம் பேட்டி எடுக்கும் பத்திரிகையாளர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி 'உங்களுக்கு தல பிடிக்குமா? தளபதியை பிடிக்குமா? என்பதாகத்தான் இருக்கும்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் 'தெறி' கனெக்சன்?

சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் கலவையான விமர்சனத்தையும் தாண்டி இரண்டாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

டைட்டில் வின்னர் யார்? பிக்பாஸ் மாஸ்டர் பிளான் இதுதானா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று யாஷிகா மற்றும் பாலாஜி வெளியேறுகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த இருவரும் வெளியேறிவிட்டால் மீதி இருப்பவர்கள் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி மற்றும் ரித்விகா.

இந்த வாரம் வெளியேறும் இருவர் இவர்கள்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேறப்போகும் இருவர் யார்? என்பதை அறிந்து கொள்வதில் நமது வாசகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பது அறிந்ததே.