ஜல்லிக்கட்டு, தமிழக அரசியலை அடுத்து கமலின் அடுத்த பார்வை

  • IndiaGlitz, [Sunday,February 26 2017]

கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசனின் சமூக வலைத்தள பக்கம் சூடான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இதனால் அவருடைய பக்கத்தின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது.

முதலில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர் கூறிய கருத்து, பின்னர் தமிழக அரசியல் குழப்ப நிலை குறித்து அவர் கூறிய கருத்து பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வை தூண்டியது. குறிப்பாக தமிழக அரசியல் குறித்து அவர் கூறிய கருத்துக்களால் அவரை கைது செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகள் புகார் செய்யும் அளவுக்கு வீரியமாக இருந்தது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு, தமிழக அரசியலை அடுத்த் தற்போது கமல், ஹைட்ரோகார்பன் என்ற மீத்தேன் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார். தமிழகத்தின் பொன் விளையும் பூமியில் மீத்தேன் வாயுவை எடுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில் இதனை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இதுகுறித்து கமல் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'பூமியின் இயற்கை வளத்தையும் ஏழையர் வாழ்வாதாரத்தையும் குலைக்கும் எந்தத் திட்டமும் தற்போது பெருவருமானம் தரினும் பின்னர் பெரு நஷ்டமாகும் என்று கூறியுள்லார்

மேலும் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனங்களின் வெற்றிக்கு பின்னால் இயற்கை அழிவு இருப்பதாகவும், ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் இதுபோன்ற திட்டம் தவறானது என்றும், தமிழக மக்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார்.

மேலும் இன்றைய மாணவர்கள் விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கு அமைதியான வழியில் போராட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் மீத்தேன் திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்த புதுச்சேரி முதல்வருக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார்.

More News

கருணாசுக்கு திருவாடனை தொகுதி மக்கள் தெரிவித்த எதிர்ப்பு.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஆட்சி பொறுப்பை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள போதிலும் மதில் மேல் பூனையாகத்தான் ஆட்சியின் நிலை உள்ளது. 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் தற்போது 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அரசுக்கு உள்ளது. 5 எம்.எல்.ஏக்கள் தடம் மாறிவிட்டால் ஆட்சி அம்போதான்...

வைக்கம் விஜயலட்சுமியின் திருமணம் திடீர் ரத்துக்கான காரணம். அதிர்ச்சி தகவல்

பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கும் சந்தோஷ் அவர்களுக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இவ்வருடம் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இந்த திருமணம் திடீரென நின்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...

333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி.

புனே நகரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

ஜெ. மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய பெண் கைது

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று சிகிச்சையின் பலனின்றி காலமானார்.

கபாலி' நஷ்டம் என திருப்பூர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டுவது ஏன்? தாணு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் உள்பட சமீபத்தில் வெளியான பெரிய ஸ்டார்களின் திரைப்படங்கள் அனைத்தும் விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் என்றும், இந்த படங்களின் வசூல் விபரங்கள் பொய்யானவை என்றும் சமீபத்தில் திருப்பூர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டியிருந்தார்.