close
Choose your channels

அர்ச்சகர் நியமனத்தில் கமல் காட்டும் அக்கறை

Monday, October 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்து வரும் நிலையில் இன்று அர்ச்சகர் நியமனம் குறித்த தனது கருத்தை சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

சமீபத்தில் திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டனர். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட இவர்களில் தலித்துக்கள் உள்பட அனைத்து சாதியினர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் கேரள அரசின் இந்து அறநிலைத்துறை எடுத்த இந்த நடவடிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளனர். ஏற்கனவே மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்திலும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், 'திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம். என்று தெரிவித்துள்ளார். இந்த புரட்சிக்கு வித்திட்டவர் தந்தை பெரியார் என்பதால் வைக்கம் வீரர் என்று அவரை குறிப்பிட்டு அவருக்கும் கமல் நன்றி கூறியிருப்பது இந்த டுவீட்டின் சிறப்பாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment