அர்ச்சகர் நியமனத்தில் கமல் காட்டும் அக்கறை

  • IndiaGlitz, [Monday,October 09 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்து வரும் நிலையில் இன்று அர்ச்சகர் நியமனம் குறித்த தனது கருத்தை சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

சமீபத்தில் திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டனர். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட இவர்களில் தலித்துக்கள் உள்பட அனைத்து சாதியினர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் கேரள அரசின் இந்து அறநிலைத்துறை எடுத்த இந்த நடவடிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளனர். ஏற்கனவே மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்திலும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், 'திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம். என்று தெரிவித்துள்ளார். இந்த புரட்சிக்கு வித்திட்டவர் தந்தை பெரியார் என்பதால் வைக்கம் வீரர் என்று அவரை குறிப்பிட்டு அவருக்கும் கமல் நன்றி கூறியிருப்பது இந்த டுவீட்டின் சிறப்பாக கருதப்படுகிறது.

More News

ஸ்லீப்பர்செல்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். சி.ஆர்.சரஸ்வதி 

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற சசிகலா, கடந்த வாரம் ஐந்து நாள் பரோலில் வெளிவந்த நிலையில் தமிழக அரசியலில் மாற்றம் நடக்க வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

மணிரத்னம் இயக்கும் தென்னிந்தியாவின் மல்டி ஸ்டார் படத்தின் விபரங்கள்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்

'ஸ்பைடர்' படத்தின் கடந்த வார வசூல் எப்படி?

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு கூட்டணியில் அமைந்த முதல் படமான 'ஸ்பைடர்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற

முதலிடத்தை பிடித்த 'ஹரிஹர மகாதேவி'

கேளிக்கை வரிவிதிப்பு காரணமாக புதிய திரைப்படங்களை வெளிடுவதில்லை என்ற தமிழ் தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவு காரணமாக கடந்த வெள்ளியன்று எந்த தமிழ்ப்படமும் வெளியாகவில்லை.

மகனின் உயிரை காப்பாற்றிய தந்தையின் ஒரே ஒரு டுவீட்

சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவை அரட்டை அடிக்கும் பொழுது போக்கு தளங்களாக இருந்த நிலைமை மாறி ஆக்கபூர்வமான பல விஷயங்களுக்கு உதவுகிறது என்பதை பல உதாரணங்களில் இருந்து பார்த்திருக்கின்றோம்.