நான் ஏன் அரசியலுக்கு வந்தேன்: ரசிகர்களிடம் கமல்ஹாசன் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,January 22 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்த்தை தொடங்கவுள்ள நிலையில் இன்று அவர் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் ரசிகர்களை சந்திக்கவுள்ளார். மேலும் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட வாரியாக ரசிகர்களை கமல்ஹாசன் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள கனரா வங்கி டிஜிட்டல் கிளை திறப்பு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த விழாவின்போது கமல் கூறியதாவது: இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும். அதற்கான பயணம் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க உள்ளேன். அப்போது பல சகோதரர்கள் கிடைப்பார்கள்.

நாட்டில் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை சரியாக இல்லை. அவற்றை டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன்' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.