கவுதமி சம்பள பாக்கி குறித்து கமல் கருத்து

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், அதற்கான சம்பளத்தை கமல்ஹாசனின் நிறுவனம் தனக்கு தரவில்லை என்றும் சமீபத்தில் நடிகை கவுதமி புகார் கூறியிருந்தார்.

இந்த புகாருக்கு ஏற்கனவே ராஜ்கமல் நிறுவனம் பதிலளித்துவிட்ட நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இதுகுறித்து கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், 'கவுதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் கம்பெனியில் அதிகாரிகள் உள்ளனர், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று பதிலளித்தார்.

மேலும்  விழுப்புரம் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவன் படுகொலை சம்பவம் குறித்த கேள்விக்கு தமிழக அரசு தேவையான நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சண்டிகரில் மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் குறித்த கேள்விக்கு மாணவர்களுக்குப் பாதுகாப்பின்மை என்பது இருக்கக்கூடாது.

இங்கு பல மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் சௌகர்யமாக படித்து செல்கின்றனர். அதே போல பிற மாகாணத்திலும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும். இந்தியாவில் எந்த மாகாணத்திலும் பாதுகாப்பு இருக்க வேண்டும் இல்லை என்றால் நாடு நல்ல நாடல்ல” என்றும் கூறினார்.

மேலும் ஐஐடியில் சமஸ்கிருத பக்தி பாடல் பாடப்பட்ட சர்ச்சை குறித்த கேள்விக்கு 'தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் பாட வேண்டும் என்பதே தன்னுடைய கருத்து என்றும் கமல்ஹாசன் கூறினார்.

More News

ரஷ்ய தொழிலதிபருடன் ரஜினி-விஜய் நாயகிக்கு திருமணம்

பிரபல தென்னிந்திய நடிகையும், ரஜினி, விஜய், தனுஷ் உள்பட முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டவருமான நடிகை ஸ்ரேயாவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. அவருக்கு நமது அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்

ஸ்ரீதேவி மரணம் குறித்து சந்தேகம் எழுப்பும் சுவாமி

ஸ்ரீதேவி மரணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதியா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

நடிகர் விஷால் அமெரிக்காவின் கலிபோர்னியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான நோய் என்பது தெரியவில்லை என்றும் பல்வேறு வதந்திகள் இணையதளங்களில் கடந்த சிலநாட்களாக பரவி வந்தது

குளியல் தொட்டியில் ஸ்ரீதேவி மரணம்: என்ன சொல்கிறது டேட்டா?

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்று கூறப்பட்டது.

பொது மேடையில் இரண்டு காமெடி நடிகர்களுக்கு முத்தம் கொடுத்த ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகத்தமிழர்களிடையே புகழ் பெற்ற ஓவியா, அந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆனபோனதிலும் இன்னும் சமூக வலைத்தள டிரெண்டில் உள்ளார்