சின்மயி-வைரமுத்து விவகாரம்: கருத்து சொன்ன கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Friday,October 12 2018]

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி கடந்த சில நாட்களாக பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். சின்மயியை தொடர்ந்து மேலும் ஒருசிலர் வைரமுத்து மீது கூறும் குற்றச்சாட்டுக்களையும் சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

சின்மயி-வைரமுத்து விவகாரம் கிட்டத்தட்ட நான்கு நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சின்மயிக்கு ஆதரவாக ஒருசில நடிகைகள் களமிறங்கியிருந்தாலும் பெரிய நடிகர்களும், வைரமுத்துவுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளும் இதுவரை இதுகுறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமால் மெளனமாக இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் வைரமுத்துவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் உலக நாயகனுமான கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் சின்மயி-வைரமுத்து பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'நியாயமான முறையில் மீ டூ குறையை சொல்ல வேண்டும்' என்று கூறியுள்ளார்.

சின்மயி, வைரமுத்து ஆகிய இருவருக்கும் ஆதரவாகவும் இல்லாமல் எதிர்ப்பாகவும் இல்லாமல் பொதுவான கருத்தை கமல்ஹாசன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் திடீர் தற்கொலை

சென்னையில் பிரபலமான ஐஏஎஸ் அகடாமி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த சங்கரன் என்பவர் இன்று அதிகாலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'ஆண் தேவதை' ரிலீசில் திடீர் சிக்கல்? நாளை வெளிவருமா?

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆண் தேவதை'.

'சீதக்காதி' சிங்கிள் ரிலீஸ் தேதியை வெளியிட்ட விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி நடித்து கொண்டிருக்கும் இன்னொரு திரைப்படமான 'சீதக்காதி' படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

18 வயது இளம்பெண் மீது காதல் கொண்டாரா வைரமுத்து? சின்மயி அதிர்ச்சி டுவீட்

பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தனது சமூக வலைத்தளம் மூலம் குற்றஞ்சாட்டியது மட்டுமின்றி

கற்பழித்தார், என் அப்பாவை கொலை செய்தார்: சல்மான்கான் மீது பிக்பாஸ் நடிகை குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். தனுஸ்ரீதத்தா, ஸ்ரீரெட்டி, சின்மயி உள்பட பலர்,