பிரதமருக்கு கமல் வீடியோ மூலம் விடுத்த கோரிக்கை

  • IndiaGlitz, [Thursday,April 12 2018]

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும் என்று தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் பிரதமருக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் வீடியோ வடிவில் பிரதமர் மோடிக்கு இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

ஐயா வணக்கம், என் பெயர் கமல்ஹாசன், நான் உங்கள் குடிமகன். இது மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பிய ஒரு திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாதது அல்ல. தமிழக மக்கள் நீதிக்காக போராடி கொண்டிருக்கின்றார்கள். நீதி வழங்கப்பட்டாகிவிட்டது. ஆனால் செயல்படுத்தப்பட வேண்டியது உங்கள் கடமை. பாமரர்களும் பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்காகத்தான் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். அது ஆபத்தானது, அவமானகரமானதும் கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆகவேண்டும். அது உங்கள் கடமை , நினைவுபடுத்த வேண்டியது என் உரிமை. இங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடித வடிவில் உங்களுக்கு அனுப்புகின்றேன். தயவுசெய்து செயல்படுங்கள். இந்நிலை மாற வழிசெய்யுங்கள். வாழ்க இந்தியா

இவ்வாறு கமல்ஹாசன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

More News

சென்னை விமான நிலையத்தில் பிரபல இயக்குனர்கள் கைது

நரேந்திரமோடி இன்று காலை தமிழகத்திற்கு வருகை தந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பிரபல இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

டாஸ்மாக்கையும் மூடுவீர்களா? ஐபிஎல் ரத்து குறித்து பிரபல நடிகர்

ஐபிஎல் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. வாழ்த்துக்கள். இதேபோல் டாஸ்மாக் கடைகளையும் மூடவும், அரசியல்வாதிகள் நடத்தி வரும் அனைத்து டிவி சேனல்களை மூடவும் போராடுவீர்களா?

காவிரி பிரச்சனை குறித்து சாம் பில்லிங்ஸ் பதிவு செய்த டுவீட்

சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து நாங்கள் வெளியேறும் நிலை எங்களுக்கு நம்ப முடியாததாக உள்ளது. சென்னை போட்டியை பார்க்க வந்த ரசிகர் காயம் அடைந்தது என் மனதை வேதனை அடைய செயுதுள்ளது.

ஐபிஎல் டிக்கெட் விற்பனை திடீர் நிறுத்தம்

சென்னையில் நடைபெறவிருந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக அந்த போட்டிகள் வேறு இடங்களுக்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜிமிக்கி கம்மல் ஷெரில்

ஜிமிக்கி கம்மல் என்ற ஒரே பாடலின் மூலம் சமூக வலைத்தளங்களில் இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனவர் ஷெரில். கல்லூரி பேராசிரியரான இவர் 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு ஆடிய நடனம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது.