மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா? கமலின் அடுத்த பட அழைப்பிதழ்

  • IndiaGlitz, [Wednesday,April 27 2016]
உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் தொடக்கவிழா நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 29-ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் தொடங்கவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் தற்போது வெளியாகியுள்ளது.

மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா? என்ற வாசகத்துடன் அமைந்துள்ள இந்த அழைப்பிதழில் தொடக்க விழா நடைபெறும் இடம் மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுளது. சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில் அமைந்துள்ள நடிகர் சங்க குளிர்சாதன வசதியுள்ள ஹாலில் காலை 8.30மணிக்கு இந்த படத்தின் தொடக்கவிழா நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் கதை-திரைக்கதையை கமல்ஹாசன் எழுதியுள்ளதாகவும், ராஜீவ் குமார் இயக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைப்பதும், ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு ஆகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.