கமல்-ரஜினி திடீர் சந்திப்பு! நடந்தது என்ன?

  • IndiaGlitz, [Sunday,February 18 2018]

நடிகர் கமல்ஹாசன் இன்னும் இரண்டு நாட்களில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள நிலையில் அவர் பல அரசியல் கட்சி தலைவர்களையும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று சற்றுமுன்னர் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார்

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறியபோது, 'என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணம் இது. இதை எனக்கு நெருங்கியவர்கள் அனைவரிடம் சொல்லி கொண்டு வருகிறேன். அந்த வகையில் எனது நெருங்கிய நண்பரான ரஜினியிடமும் சொல்லி கொள்ளவே அவரை சந்தித்தேன்.

இந்த சந்திப்பு முழுக்க முழுக்க நட்பு ரீதியிலானது. இதில் அரசியல் எதுவும் இல்லை. எனது கட்சியின் தொடக்கவிழாவிற்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளேன். வருவதும், வராததும் அவர் எடுக்கும் முடிவு' என்று கூறியுள்ளார்.

ரஜினியும் மிக விரைவில் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் கமல்-ரஜினியின் இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

செக்க சிவந்த வானம்: தமிழகத்தை உலுக்கும் முக்கிய நிகழ்வின் கதையா?

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஐஸ்வர்யாராய், அதிதிராவ் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வரும் 'செக்க சிவந்த வானம்'

தந்தை நடிகரின் படத்தில் பிரபல மகள் நடிகை

கோலிவுட் திரையுலகில் தந்தை - மகள் ஒரே படத்தில் பணிபுரிவது புதியது அல்ல. கே.பாக்யராஜ் - சரண்யா, கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன், அர்ஜூன் - ஐஸ்வர்யா உள்பட பலர் ஒரே படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார் ஜோதிகா: நடிகர் சிவகுமார்

நடிகை ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

தல அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணையும் ஆக்சன் கிங்?

தல அஜித் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்த 'மங்காத்தா' திரைப்படம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. மீண்டும் 'மங்காத்தா 2' படத்தில் இருவரும் விரைவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

வித்யாபாலனின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி கொடுத்து 36 வயதினிலே' 'மகளிர் மட்டும்' மற்றும் 'நாச்சியார்' என ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார்.