கோவை சிறுமி கொலை: பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்

கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது

இந்த சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசிலரை சந்தேகத்தின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நேரில் ஆறுதல் கூறியுள்ளார். மற்ற அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சார பரபரப்பில் இருக்கும் நிலையில் கமல் மட்டும் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூற நேரம் ஒதுக்கியது அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது