கமல் ஒரு போலி பகுத்தறிவாதி: தமிழிசை செளந்திரராஜன்

  • IndiaGlitz, [Friday,July 13 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவராக கமல்ஹாசனும், அதன் பின்னர் உயர்நிலைக்குழு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று உயர்நிலைக்குழுவை கலைத்துவிட்ட அதற்கு பதில் பொதுக்குழு உறுப்பினர்களை கமல்ஹாசன் நியமனம் செய்துள்ளார். தனது கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தையொட்டி இந்த மாற்றத்தை கமல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி நேற்று தொண்டர்கள் முன் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகம் முன் கட்சிக்கொடியை ஏற்றினார்.

இந்த நிலையில் நேற்று கமல் கொடியேற்றிய நாளும், கட்சி தொடங்கிய நாளும் அமாவாசை தினம் என்றும், பகுத்தறிவாளரான கமல் அமாவாசை அன்று திட்டமிட்டு கட்சியை தொடங்கி, கொடியையும் ஏற்றினாரா? அல்லது இது தற்செயலாக நிகழ்ந்ததா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், மய்யம் என கட்சி ஆரம்பித்தவர் போலி பகுத்தறிவு உள்ளவர் என்றும், கட்சி தொடங்கியதும், கொடி ஏற்றியதும் அமாவாசையில் என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் கமல்ஹாசன் அமாவாசை தினத்தில் கட்சி துவங்கி, கொடியேற்றம் செய்து ஏன் வேஷம் போட வேண்டும்? என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழிசையின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

More News

அஜித்தை அடுத்து கமல்ஹாசனுடன் நேருக்கு நேர் மோதும் நயன்தாரா

உலக நாயகன் கமல்ஹாசனின் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படமான 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகிறது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது

அனிருத்துடன் இணைந்து இசையமைக்கும் இரட்டை இசையமைப்பாளர்கள் 

தமிழ்த்திரையுலகில் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைப்பது என்பது புதிதல்ல. விஸ்வநாதன் - ராமமூர்த்தி பல ஆண்டுகளாக இணைந்து இசையமைத்தனர்.

20 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்திய விஞ்ஞானி கேரக்டரில் மாதவன்

'இறுதிச்சுற்று', 'விக்ரம் வேதா; படங்களுக்கு பின்னர் கோலிவுட் திரையுலகில் மீண்டும் பிசியான நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி கேரக்டரில் நடிக்கவுள்ளார்,.

இதையும் ட்ரோல் பண்ணுங்கள்: நெட்டிசன்களுக்கு எடுத்து கொடுத்த ரஜினி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை வந்த ரஜினிகாந்த் நேற்று ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

ரஜினிக்கு நண்பராகும் சிவகார்த்திகேயன் பட வில்லன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் டார்ஜிலிங் பகுதியில் முடிவடைந்தது.