பொன்னியின் செல்வனுக்காக பணிபுரிந்த கமல்ஹாசன்: வைரல் புகைப்படம்

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் பணிபுரிந்துள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது அது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இந்திய திரையுலகின் பல பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் கமல்ஹாசனும் ஒரு சிறு பணியை இந்த படத்திற்காக செய்து உள்ளதாக தகவல் வெளியானது.

பொன்னியின் செல்வன் கதைச்சுருக்கத்தை கமல்ஹாசன் டைட்டிலின்போது கூறுவதாகவும் ஒவ்வொரு கேரக்டரின் அறிமுகத்திற்கும் அவர் குரல் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக குரல் கொடுக்கும் கமல்ஹாசனின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 1990களில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்ற கனவு கமல்ஹாசனிடம் இருந்த நிலையில் அது ஒருசில காரணங்களால் நனவாகாமல் போனது. இருப்பினும் தற்போது மணிரத்னம் மூலம் தனது கனவு நனவாகி நிலையில் அந்த படத்தில் தன்னுடைய பணியையும் கமல்ஹாசன் இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.