close
Choose your channels

யாருக்கும் பின்னணி குரல் இல்லை: பொன்னியின் செல்வனில் கமல் செய்தது இதுதான்!

Tuesday, July 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படம் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே இந்தியாவில் உள்ள பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் கமல்ஹாசன் இந்த படத்தில் பணிபுரிந்து உள்ளதாகவும், அவர் ஒரு முக்கிய கேரக்டருக்கு பின்னணி குரல் கொடுத்து உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்த தகவலின்படி கமல்ஹாசன் எந்த கேரக்டருக்கும் பின்னணி குரல் கொடுக்கவில்லை என்றும் ’பொன்னியின் செல்வன் படத்தின் கதைச் சுருக்கத்தை டைட்டிலின் போது அவர் தனது குரலில் கூறுவதாகவும் அதுமட்டுமின்றி ஒவ்வொரு கேரக்டர் அறிமுகமாகும்போது அந்த கேரக்டர் குறித்து கமல்ஹாசன் விளக்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1987ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த’ நாயகன்’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் படத்தில் கமல்ஹாசன் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment