மதுவிலக்கு சாத்தியமில்லை.. ஆனால் இதை செய்யலாம்.. அரசுக்கு கமல்ஹாசன் அறிவுரை..!

  • IndiaGlitz, [Sunday,June 23 2024]

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறிய நிலையில் அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வள்ளுவர் தனது திருக்குறளில் கள்ளுண்ணாமை குறித்து ஒரு அதிகாரம் இயற்றி இருப்பதை அடுத்து அந்த காலத்தில் இருந்தே மது இருந்தது உறுதி செய்யப்படுகிறது. எந்த அரசாக இருந்தாலும் மதுவில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை கண்டிப்பாக மனோதத்துவ ரீதியாக ஒரு அளவுக்கு மேல் குடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அதுதான் மிகவும் முக்கியம்.

சாலை விபத்து நடப்பதற்காக போக்குவரத்து நிறுத்த முடியாது, வாகன வேகத்தை வெகுவாக குறைக்கவும் முடியாது, அதுபோல் இது போன்ற சில அசம்பாவிதங்கள் நடைபெறுகிறது என்பதற்காக மதுவை ஒழிக்க முடியாது, பெரிய ஆலைகள் வைத்து நடத்துகிறார்கள், வீதிக்கு வீதி கடைகள் வைத்து நடத்துகிறார்கள். மருந்து கடைகளை விட அதிகமாக மது கடைகள் இருக்கின்றன, எனவே மக்களுக்கு குறைவாக குடியுங்கள் என்று அறிவுரை செய்ய வேண்டும்.

அறிவுரை செய்யும் பதாகைகள் டாஸ்மாக் பக்கத்தில் இருக்க வேண்டும், மதுவை உடனடியாக நிறுத்த முடியாது, டாஸ்மாக்கை உடனடியாக இழுத்து மூட முடியாது, அப்படி சொல்வது தவறான கருத்து, அதற்கு உலகத்தில் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன, அமெரிக்காவே ஒரு முன்னுதாரணம். மதுவிலக்கு பரிபூரணமாக கொண்டு வந்தால் இன்னும் அதிகமாக தான் மாஃபியாக்கள் தோன்றுவார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

More News

புயலுக்கு பின் அமைதி.. அமைதிக்கு பின் ஒரு புயல்.. த்ரிஷா வர்ணித்தது யாரை?

நடிகை த்ரிஷா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் 'புயலுக்கு பின் ஓர் அமைதி, அமைதிக்கு பின் ஒரு புயல். என்று வர்ணித்து தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சினிமாவின் எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் படம்.. சிம்பு பாராட்டிய திரைப்படம்..!

சமீபத்தில் வெளியான திரைப்படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் சிம்பு சினிமாவை மறு வரையறை செய்யும் திரைப்படம் என்று புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

'இந்தியன் 2' படத்தின் சூப்பர் அப்டேட்.. நாளை மறுநாள் கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன் 2'படம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில்

மீண்டும் சர்வதேச அங்கீகாரம் பெறும் சூரி படம்.. தயாரிப்பாளர் பெருமிதம்..!

நடிகர் சூரி நடித்த 'கருடன்' என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் அவருடைய இன்னொரு படம் சர்வதேச அங்கீகாரம்

'விடாமுயற்சி' படப்பிடிப்பில் த்ரிஷா கலந்து கொள்வது எப்போது? சுரேஷ் சந்திரா தகவல்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் அடுத்த கட்ட படிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் விரைவில் த்ரிஷா மற்றும் அர்ஜூன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.