போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது.. எண்ணூர் எண்ணெய் கழிவுகள் விவகாரம் குறித்து கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Sunday,December 17 2023]

சமீபத்தில் அடித்த மிக்ஜாம் புயல் காரணமாக எண்ணூர் சிபிசிஎல் ஆலையிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி அந்த பகுதியில் உள்ள கால்வாய் வழியாக படிந்தது என்பதும் இதனால் மழை நீரோடு கச்சா எண்ணெய் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்று செய்தி வெளியானது.

இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. இதனை அடுத்து எண்ணூர் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டன் கணக்கில் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எண்ணூர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் படகில் சென்று அந்த பகுதி முழுவதும் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த இடத்திற்கு நான் பலமுறை வந்துள்ளேன். கடந்த காலத்தை விட இம்முறை பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி இன்றுக்குள் எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும். ஆனால் அதற்கான ஒரு அறிகுறியும் இங்கு இல்லை. எண்ணெய் கழிவு அகற்றுவதில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை.

இங்குள்ள கழிவுகளை அகற்ற நிபுணர்கள் இல்லை, மீனவர்கள் தான் அகற்றி வருகின்றனர். எண்ணெய் கழிவை அகற்ற பாத்ரூம் பக்கெட்டை கொடுத்து இருப்பது மனிதாபிமானமற்ற செயல். உயிர்க்கொல்லி வேலைகள் செய்பவர்களுக்கு பெரும் தண்டனையை அரசு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறையும் இதுபோல நடக்கும் போது நிவாரணம், போனஸ் கொடுத்து தப்பிக்க முடியாது. எண்ணெய் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணெய் கழிவு விவகாரத்தில் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி பழி போட்டு வரும் நிலை மாற வேண்டும். எண்ணெய் கழிவு கடவுள் கொடுத்த வரம் அல்ல. எண்ணெய் கழிவு பாதிப்பு பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை இருந்தால் தான் அச்சம் ஏற்படும். இது மீனவர்களின் பூமி. இவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்,

More News

'தலைவர் 171' படத்தில் ரத்னகுமார் இல்லை.. ஏன்? லோகேஷ் கனகராஜ் விளக்கம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தலைவர் 171' திரைப்படத்தில் ரத்னகுமார் பணி புரியவில்லை என தகவல் வெளியாகி உள்ளன.  

'லால்சலாம்' திருவிழா ஆரம்பம்.. லைகா கொடுத்த மாஸ் அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும்

மதிமாறன் திரைப்பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க

நீ மனசு வச்சா மட்டும் தான் காப்பாத்த முடியும்: அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2' ட்ரைலர்

அருள்நிதி நடித்த 'டிமான்டி காலனி' என்ற திரைப்படம் கடந்த  கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் 8 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

 இந்து முஸ்லிம் அடித்துக்கொண்டு  சாகலைன்னா?   சிம்பு தேவனின் 'போட்' டீசர்..!

விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்கிய சிம்பு தேவன் 8 ஆண்டுகள் கழித்து     இயக்கியிருக்கும் படம் 'போட்'. யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும்