விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோ இல்லாத அரசு: கமல்ஹாசன் காட்டம்

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு என்று நேற்று மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

தமிழக அரசை விமர்சனம் செய்யும் செய்தி ஊடகங்களுக்கு மறைமுகமாக தமிழக அரசு இடைஞ்சல் செய்து வருவதாகவும், இதற்காகவே சில செய்தி சேனல்கள் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அரசை விமர்சனம் செய்யும் ஊடகங்களை பழிவாங்கும் இந்த அரசு, விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசாக இருப்பதாக கமல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன், நினைவிலும்கூட நிலைக்க வாய்ப்பில்லை. இன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் இலட்சியங்களில் ஒன்று' என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கும் வழக்கம்போல் நெட்டிசன்களிடம் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் பதவி பறிப்பு: ஐபிஎல்-க்கும் சிக்கல் வருமா?

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல்ல உங்க துறையை கவனிங்க கமல்: தமிழிசை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தற்போது உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்க தயார் என கமல்

ப.சிதம்பரத்தின் டீ-காபி டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி

ப.சிதம்பரம் தனது டுவிட்டரில், 'சென்னை விமான நிலையத்தில் உள்ள 'காபிடே' கடையில் ஒரு டீயின் விலை ரூ.135 என்றும் காபியின் விலை ரூ.180 என்றும் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புரட்சிக் களம் அழைத்தால் வருவேன்: தூத்துக்குடி மக்களுக்கு கமல்ஹாசனின் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாகவே தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது.

விராத் கோஹ்லி: உலகின் மிகச்சிறந்த வீரர் விராத் கோஹ்லியின் வெற்றி ரகசியம்

விராத் கோஹ்லி என்ற பெயரை கேட்டாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் வந்துவிடும். அந்த அளவுக்கு அவருடைய ஆட்டத்தில் ஒரு வெறித்தனம் இருக்கும்.