கேட்டது தண்ணீர், கிடைத்தது துணைவேந்தர்: நம்மை தூண்டி விடுகின்றார்களா? கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Friday,April 06 2018]

காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக மாநிலத்தையும் மத்திய அரசையும் தமிழக மக்கள் வலியுறுத்தி கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமனம் செய்துள்ளார் தமிழக ஆளுனர். இந்த நடவடிக்கை தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கர்நாடகாவிடம் இருந்து நாம் கேட்டது தண்ணீர், ஆனால் பெற்றதோ துணைவேந்தர். எனவே மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள பிளவு வெளிப்படையாக தெரிகிறது. நம்மை எதிர்மறையாக நடந்து கொள்ள அவர்கள் தூண்டிவிடுகின்றார்களா? இந்த விளையாட்டை நினைத்து ஆச்சரியபடுகிறேன். என்று கூறியுள்ளார்.   

கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக நியமனம் செய்ததை கமல் மட்டுமின்றி மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சல்மான்கான் வேட்டையாடி கருப்பு மானில் அப்படி என்ன விசேஷம்?

மனிதர்களை கொலை செய்த பலரே தண்டனையின்றி சுதந்திரமாக உலாவி வரும் நிலையில் மான்களை கொன்ற ஒருவருக்கு ஐந்து வருடங்கள் சிறையா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.

பைக் விபத்தில் பலியான 16 வயது சிறுவன்: பெற்றோர் மீது வழக்கு

18 வயதிற்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்ட தடை என காவல்துறை எச்சரித்து வந்தும், சிறுவர்கள் பைக் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

'காலா'வை குறிவைத்து காய் நகர்த்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

ஏப்ரல் 27ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் உறுதியில்லை என்பதால் இந்த படத்தின் வியாபாரமும் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் அதே நேரத்தில் காலாவை குறிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் காய் நகர்த்த தொடங்கிவிட்டன.

காமன்வெல்த் போட்டி: 2வது தங்கமங்கைக்கு சேவாக் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் மீராபாய் முதல் தங்கத்தையும், குருராஜா முதல் வெள்ளி பதக்கத்தையும் பெற்று தந்த நிலையில் இன்று இந்தியாவுக்க்கு இரண்டாவது தங்கம் கிடைத்துள்ளது.

மெர்க்குரி ரிலீஸ் குறித்து கார்த்திக் சுப்புராஜின் குழப்ப விளக்கம்

தமிழ்ப்பதிப்பு மட்டும் வெளிவராது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாகவும், வசனமே இல்லாத 'மெர்க்குரி' படத்திற்கு தமிழ் மொழி பதிப்பு என்ற ஒன்று உண்டா?