புரட்சிக் களம் அழைத்தால் வருவேன்: தூத்துக்குடி மக்களுக்கு கமல்ஹாசனின் அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,March 25 2018]

கடந்த சில ஆண்டுகளாகவே தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகிறது.

ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் ஆலையையே மூட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆலையின் ஒப்பந்தத்தை நீடிக்கவும், விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் இந்த ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல், புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்க திட்டத்திற்கு எதிராக அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள திமுக, மதிமுக உள்பட பல கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் போராட்டக்களத்தில் குதிக்கவும் தயார் என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.

ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை.
தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.

— Kamal Haasan (@ikamalhaasan) March 24, 2018

More News

விராத் கோஹ்லி: உலகின் மிகச்சிறந்த வீரர் விராத் கோஹ்லியின் வெற்றி ரகசியம்

விராத் கோஹ்லி என்ற பெயரை கேட்டாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் வந்துவிடும். அந்த அளவுக்கு அவருடைய ஆட்டத்தில் ஒரு வெறித்தனம் இருக்கும்.

ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளை மிரட்டிய எமன்! அண்ணா சாலையில் பரபரப்பு

இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையிலும் அதன் முக்கியத்துவம் தெரியாமல் இன்னும் பலர் ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

ஜெனிவாவில் தனுஷ் பட நாயகியின் திருமணம்

பிரபல நட்சத்திரங்கள் சமீபகாலமாக வெளிநாட்டில் திருமணம் செய்வதை வழக்கமாக்கி வருகின்றனர். சமீபத்தில் விராத்கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா திருமணம், இத்தாலியில் நடைபெற்றது என்பது தெரிந்ததே

விஜய்யை முந்துவாரா மகேஷ்பாபு?

கடந்த சில ஆண்டுகளாக இணையதளங்களில் டிரெண்ட் என்றால் அது தமிழ்ப்படங்கள்தான். குறிப்பாக பெரிய நடிகர்களின் டீசர், டிரைலர் ரிலீசாகும்போது யூடியூபில் கிடைக்கும் லைக்ஸ்கள்

தி.நகர் சரவணா ஸ்டோர் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்

சென்னை தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் கடைக்கு மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கடையின் உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.