பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை மீண்டும் தர உத்தரவிட முடியாது என்றும், ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால் தூத்துக்குடி மக்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பதும் அப்பகுதி மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக இந்த தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு குறித்து ஏற்கனவே திமுக எம்பி கனிமொழி, மதிமுக எம்பி வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் சற்றுமுன் இந்த தீர்ப்பு குறித்து கூறியதாவது:

ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று கமல்ஹாசன் இதுகுறித்து பதிவு செய்த ஒரு டுவிட்டில், ‘நாளை ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பு. நீதியை நம்புகிறோம். நாளை நமதாகவே இருக்கும் என நம்பும் பல கோடி மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக... உங்கள் நான் என்று பதிவு செய்திருந்தார்.
 

More News

கொரோனா மரபணுவில் மாற்றம்-10 மடங்கு தீவிரம் கொண்ட கொரோனா வைரஸ் பரவுவதாகப் பரபரப்பு!!!

கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி ஒன்றே இறுதித் தீர்வாக நம்பப்படுகிறது.

தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது: வேதாந்தா கோரிக்கையை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதாக பொதுமக்களால் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த ஆலைக்கு தடை விதித்தது

'செம்பருத்தி' சீரியலின் பிரபலம் திடீர் மரணம்: கதறியழுத சீரியல் நடிகையின் வீடியோ

'செம்பருத்தி' சீரியலின் பிரபலம் ஒருவர் திடீரென மரணம் அடைந்து விட்டதை அடுத்து அந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் கண்ணீருடன் கதறி அழுத வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

ஜிவி பிரகாஷ் பட நாயகியின் டுவிட்டர் பக்கம் ஹேக்: பரபரப்பு தகவல்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்த நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பான்-இந்தியா படத்திற்காக பாலிவுட் இயக்குனருடன் கைக்கோர்த்த பிரபாஸ்: டைட்டில் அறிவிப்பு 

கடந்த சில ஆண்டுகளாகவே தென்னிந்திய மாஸ் நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் பான்-இந்தியா திரைப்படங்களாக அதாவது பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களாக உள்ளன