தளரா மனம் கொண்ட தமிழன் வெற்றி பெற்ற நாள்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,January 23 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கமல்ஹாசன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி கண்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறுவதை அடுத்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்! என்று பதிவு செய்துள்ளார்.

உலகமே வியந்து நோக்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னை மெரீனாவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் நடத்தப்பட்டு வெற்றி கண்டது. இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில் கமல்ஹாசன் மேற்கண்ட டுவீட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமெரிக்காவில் ஒரு நெடுவாசல் போராட்டம்: அர்னால்ட் ஆதரவு

சமீபத்தில் தமிழகத்தின் உள்ள நெடுவாசலில் விளைநிலங்களில் மீத்தேன் எடுக்க மத்திய அரசு முயற்சித்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுக்க எதிர்ப்பு குரல் எழுந்தது

சுராங்கனி புகழ் சிலோன் மனோகர் காலமானார்

சிலோன் மனோகர் என்று அழைக்கப்பட்டு வந்த மனோகர் கடந்த 70ஆம் ஆண்டுகளில் இலங்கையில் பாடகாராக இருந்தவர். மேலும் இலங்கையில் தயாரான முதல் தமிழ்ப்படமான 'பாச நிலா' என்ற படத்தில் ஹீரோவாக முதன்முதலாக நடித்தார்.

ராம்கோபால்வர்மாவின் 'God Sex and Truth' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் அமெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா நடித்த 'God Sex and Truth' என்ற வெப் திரைப்படத்தின் கவர்ச்சியான ஸ்டில்கள்

நாம் உயிருடன் இருக்க எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் தான் காரணம்: மிஷ்கின்

இயக்குனர்கள் மிஷ்கின், ராம் நடிப்பில் இயக்குநர் G.R. ஆதித்யா இயக்கிய 'சவரக்கத்தி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது ஆபாச விமர்சனம். நித்தியானந்தா ஆசிரமம் மீது புகார்

சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக கவிஞர் வைரமுத்து மீது குற்றஞ்சாட்டிய நிலையில் அவரையும் அவரது குடும்பத்தினர்களையும் ஒருசிலர் தரக்குறைவாக விமர்சனம் செய்தனர்.