எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் இயற்கை எய்திவிட்டார்: கமல்ஹாசன் இரங்கல்..!

  • IndiaGlitz, [Wednesday,April 19 2023]

எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் இயற்கை எய்திவிட்டார் என உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் வசன கர்த்தாவாக இருந்தவர் கிரேசி மோகன். இவர் கமல்ஹாசன் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே. குறிப்பாக மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக கிரேசி மோகன் காலமானார். இந்த நிலையில் அவரது மனைவி நளினி கிரேசி மோகன் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்.

More News

பிரியங்கா மோகனுக்கு அடித்த சூப்பர் அதிர்ஷ்டம்.. யாருக்கு ஜோடியாகிறார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' மற்றும் 'டான்' படங்களில் நடித்த பிரியங்கா மோகன் தற்போது பிரபல நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக கமல்ஹாசனுக்கு ஜோடியாகிறாரா நயன்தாரா? பிரபல இயக்குனரின் மாஸ் திட்டம்..!

 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் தற்போது அவர் 'ஜவான்' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும்

விஜய் அரசியலுக்கு வந்தால் அவர் தான் என்னை ஆதரிக்க வேண்டும்: சீமான்

விஜய் அரசியலுக்கு வந்தால் அதை நான் வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் அவரை நான் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின்

ஒரே ஒரு வெற்றிப்படம் தான்.. நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை?

தென்னிந்திய திரை உலகில் ஒரே ஒரு வெற்றிப்படம் கொடுத்த நடிகை தற்போது நயன்தாரா, சமந்தாவை விட அதிக சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளன. 

பிரபல பாலிவுட் நடிகருடன் இங்கிலாந்தில் நடிகை சமந்தா.. செம்ம புகைப்படம் வைரல்..

பிரபல பாலிவுட் நடிகருடன் நடிகை சமந்தா இங்கிலாந்து நாட்டில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு சுமார் 8 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது.