அரசாள்பவர் கேட்டால்தானே! பஸ் கட்டண உயர்வு குறித்து கமல்

  • IndiaGlitz, [Wednesday,January 24 2018]

நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தனிக்கட்சி தொடங்கி தீவிர அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் இதுகுறித்து தனது ரசிகர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் தமிழக அரசு உயர்த்திய பேருந்து கட்டண உயர்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு போராட்ட தேதியையும் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் பஸ் கட்டணத்தை உயர்த்தாமலேயே போக்குவரத்து துறைக்கு நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் இருப்பதாகவும், ஆனால் அரசாள்பவர்கள் இதுகுறித்து கலந்தாலோசிப்பது இல்லை என்றும் தனது வருத்தத்தை கமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனவெல்லாம் செய்திருக்கும். முடிவெடுத்துவிட்டு கருத்து கேட்பது அரசியல் சாதுர்யம். முன்பே கேட்டிருந்தால் நல்ல நிவாரணம் சொல்லும் வல்லுனர்கள் அரசுப் பணியிலேயே உள்ளனர். அரசாள்பவர் கேட்டால்தானே! என்று கூறியுள்ளார்

More News

பிரதமர் மோடியின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்த டிரம்ப்

குஜராத் முதல்வராக இருந்தபோது அமெரிக்காவுக்கு மோடி நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய பிரதமராக அதே மோடி பொறுப்பேற்றபோது அமெரிக்கா மோடியை சிவப்புக்கம்பளத்துடன் வரவேற்பு அளித்தது.

அமெரிக்கா, கனடாவுக்கு விடுத்த சுனாமி எச்சரிக்கை வாபஸ்

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா அருகே இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலையில் 8.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

தமிழக அரசை கிண்டல் செய்த இசையமைப்பாளர் டி.இமான்

கோலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் 100 படங்களுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் இமான்100' என்ற நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா மகள் அறிமுகமாகும் படம்

'இதுதாண்டா போலீஸ்' டாக்டர் ராஜசேகரை சினிமா ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக பவனிவந்த ராஜசேகரின் மகள் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாகவுள்ளார்.

கமல்ஹாசனை சந்திக்க வந்த அன்புமணியின் மனைவி

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியை தொட