என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்: கமல்ஹாசன் புகழாரம்

  • IndiaGlitz, [Thursday,October 15 2020]

உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவு பெற்று தற்போது மூன்றாவது ஆண்டு நடைபெற்று வருகிறது. மேலும் அவர் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை சந்தித்து விட்டார் என்பதும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரும் அவரது கட்சியின் வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் நான் அரசியலுக்கு வந்தது இவருடைய பேச்சை கவர்ந்து தான் என்று முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்களை கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்

இன்று அப்துல் கலாம் பிறந்த நாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதை அடுத்து அவருக்கு பிறந்தநாள் கூறும் வகையில் கமல்ஹாசன் பதிவு செய்த ட்வீட்டில் கூறியிருப்பதாவது: என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான திரு.அப்துல்கலாம் அவர்களின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி.

முன்னதாக கமலஹாசன் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாக ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்று அவருடைய குடும்பத்தினரிடம் ஆசி பெற்ற பின்னரே கட்சி பணியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அரசியல் ஆக்கப்படுகிறது: '800' திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான '800' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில்

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா எண்ட்ரி: களைகட்டபோகுதா விளையாட்டு?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி பத்து நாட்கள் முடிவடைந்து இன்று பதினோராவது நாள் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற போகும்

கொரோனா பாதிப்பால் காது கேட்காமல் போகுமா??? பதற வைக்கும் புதுத்தகவல்!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நிரந்தரமாக காது கேட்காமல் போகும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது

தலைவர் நினைத்திருந்தால் அன்றே முரளிதரன் முடிவுக்கு வந்திருப்பார்: விஜய்சேதுபதிக்கு கடிதம் எழுதிய பிரபலம்!

பெண் கவிஞர் தாமரை விஜய்சேதுபதிக்கு இதுகுறித்து நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது

நடிகருக்கு ரூ.2 கோடி மதிப்பு காரா? நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த இளம் நடிகை!

சமீபத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கினார்கள். போர்ஷ் 911 கேரிரா எஸ் என்ற நவீன இந்த காரின் மதிப்பு சுமார் 2 கோடி என்பதும்