அமித்ஜிக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,June 12 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 'விஸ்வரூபம் 2' என கூகுளில் 66 நாடுகளில் மக்கள் தேடியுள்ளனர் என்பது இதுவொரு தமிழ்ப்படம் அல்ல, உலக படம் என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமித் சாத் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலரை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிப்பு என்றால் என்ன? என்பதை உங்கள் படத்தை பார்த்துதான் நான் தெரிந்து கொண்டேன். 'விஸ்வரூபம் 2' டிரைலர் அபாரமாக உள்ளது. விரைவில் முழு படத்தையும் திரையில் பார்க்க ஆவலுடன் உள்ளேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

இந்த டுவீட்டுக்கு கமல்ஹாசன் 'நன்றி அமித்ஜி' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து அதில் 'சாத் என்பதை அடைப்புக்குறியில் குறிப்பிட்டுள்ளார். அமித்ஜிக்கு பக்கத்தில் உள்ள அடைப்புக்குறியை கமல்ஹாசன் ஏன் பதிவு செய்தார் என்பது அனைவருக்கும் புரிந்ததே. ஒருவேளை புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

More News

விஜய் பிறந்த நாளில் அஜித் செய்ய போவது என்ன தெரியுமா?

தளபதி விஜய் பிறந்த நாளுக்கு இன்னும் பத்தே நாட்களே உள்ளது. விஜய்யின் இந்த ஆண்டு பிறந்த நாளை அவரது ரசிகர்கள் வெகுசிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தனர்.

ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரருக்கு நிச்சயதார்த்தம்: விரைவில் திருமணம்

கொல்கத்தா அணியின் சிறந்த பேட்ஸ்மேனின் ஒருவரான  நிதீஷ் ராணாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நீட் தேர்வு: சி.பி.எஸ்.இ-க்குக் ஆப்பு வைத்த மத்திய அரசு

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை சி.பி.எஸ்.இ அமைப்பு நடத்தி வந்த நிலையில் இனிமேல் இந்த தேர்வை சி.பி.எஸ்.இ நடத்தாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த 'காலா' நடிகை

தல அஜித் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் முடிந்தது என்பது தெரிந்ததே.

யூனிசெப் அமைப்பிற்காக இன்று களமிறங்கிய நடிகை த்ரிஷா

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும், குழந்தைகளுக்கு உரிய கல்வியை வழங்க வேண்டும்