விசித்ரா- ஜோவிகா விவகாரம் குறித்து பேசிய கமல்ஹாசன்.. சைலண்ட் ஆன போட்டியாளர்கள்..!

  • IndiaGlitz, [Saturday,October 07 2023]

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் முறையாக கமல்ஹாசன் தோன்றும் எபிசோட் என்பதால் இன்றைய எபிசோடுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வாரம் விசித்ரா மற்றும் ஜோவிகா ஆகிய இருவரும் காரசாரமாக மோதிக்கொண்டனர்.

ஒவ்வொருவருக்கும் அடிப்படை கல்வி கற்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு அல்லது டிகிரி படிக்க வேண்டும் என்று விசித்ரா கூற, அதற்கு ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்த ஜோவிகா குழந்தைகளைப் படிக்க வைக்க கட்டாயப்படுத்தாதீர்கள், ஒரு குழந்தை படித்து தான் முன்னேற வேண்டும் என்ற அவசியம் இல்லை, குழந்தைகளை படிக்க வேண்டும் என்ற அழுத்தம் கொடுப்பதால் தான் நிறைய குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், படிக்காமலேயே குழந்தைக்கு என்ன ஆர்வம் இருக்கிறதோ, அதில் ஈடுபட அனுமதியுங்கள் என்று கூறினார்.

ஜோவிகா பேச்சுக்கு நிறைய பேர் கைதட்டினார்கள் என்பதும் அவரை ஆதரித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் விசித்ரா தான் சொன்னதை எல்லோரும் புரிந்து கொள்ளவில்லை என்றும், எல்லோருக்கும் அடிப்படை கல்வி முக்கியம் என்றும் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் இதுகுறித்து இன்று கமல்ஹாசன் தனது கருத்தை தெரிவித்தார். அவர் பேசியபோது, ஜோவிகா, நீங்கள் எப்போதாவது கல்வி முக்கியம் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்களா? விசித்ரா கூறிய கருத்தில் தப்பில்லை, இது ஒரு ஜெனரேஷன் இடைவெளி. நமக்கு வரவில்லை என்றால் விட்டுவிட வேண்டும், உயிரைக் கொடுத்து கல்வி கற்க வேண்டும் என்பது முக்கியமில்லை என்று நினைப்பவன் நான். குறைகளை சொல்லும் போது உடனே கேட்டுக் கொள்ளும் மனப்பான்மை பலருக்கு இருப்பதில்லை. கற்றல் விதி இருக்கலாம், ஆனால் கற்றல் வதை இருக்க கூடாது என்று கூறுகிறார்.

கிட்டத்தட்ட இருவரும் சொல்வதும் சரி என்று கமல் கூறினாலும் கல்வி முக்கியம் என்று அவர் விசித்ராவுக்கு ஆதரவாக தான் பேசினார், இதனால் ஜோவிகா பேச்சை கேட்டு கைதட்டிய அனைத்து போட்டியாளர்களும் சைலன்ட் ஆகியுள்ளனர்.

More News

பிக்பாஸ் தமிழ் சீசன் 7: முதல் வாரமே வெளியேறும் போட்டியாளர் இவர்தான்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர் என்பதும் அவர்களின் மூன்று போட்டியாளர்கள் மிகவும் குறைவான வாக்குகள் பெற்றிருந்ததால்

அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பு.. ரிலீஸ் தேதியை மாற்றிய 'லியோ' தயாரிப்பாளர்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான இறுதி கட்ட புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

கதை மீது நம்பிக்கை வைத்து  படம் எடுத்துள்ளனர். . நேற்று வெளியான படத்திற்கு சூர்யா வாழ்த்து..!

நேற்று த்ரிஷா நடித்த 'தி ரோட்', விஜய் ஆண்டனி நடித்த 'ரத்தம்' மற்றும் 'இறுகப்பற்று' உள்பட ஒரு சில படங்கள் வெளியான நிலையில் நேற்று வெளியான படம் ஒன்றுக்கு நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து

சென்சார் கட் இல்லாமல் ரிலீஸ் ஆவது உறுதி.. 'லியோ' விநியோகிஸ்தர் தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் சமீபத்தில் சென்சார் ஆனது என்பதும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்தனர் என்பதையும் பார்த்தோம்.

இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்.. மோடி தலையிட வேண்டும்: நடிகை ராதிகா ஆவேசம்..!

நடிகை ரோஜாவுக்கு தனது முழு ஆதரவு என தெரிவித்துள்ள நடிகை ராதிகா இந்த விஷயத்தில் மோடி தலையிட வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.