கமல்-சிவகார்த்திகேயன் படத்தில் இணைவது இந்த பிரபல நடிகையா?

  • IndiaGlitz, [Thursday,January 27 2022]

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே நடந்தபோது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனில் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு சிவகார்த்தியன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா நடித்த ’என்ஜிகே’ படத்திற்கு பின்னர் சாய்பல்லவி தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்ற நிலையில் தற்போது கமல்-சிவகார்த்திகேயன் படத்தில் இணை உள்ளார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாய்பல்லவி நடித்த ‘ஷ்யாம் சிங்காய் ராய்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது ரானா டகுபதியுடன் ’விரட்டா பர்வம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

 

More News

மகள் பிறந்த நாளில் ரொமான்ஸ் போட்டோஷூட் எடுத்த சினேகா - பிரசன்னா தம்பதி! 

நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா தம்பதியின் மகளான ஆத்யந்தாவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பிறந்தநாளில் சினேகா மற்றும் பிரசன்னா எடுத்துக்கொண்ட ரொமான்ஸ்

காதல் கணவரை மணந்தார் 'நாகினி' நடிகை:  குவியும் வாழ்த்துக்கள்!

சன் டிவியில் ஒளிபரப்பான 'நாகினி' என்ற சீரியலில் நடித்த நடிகை மௌனி ராய் தனது காதலரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை மீது திடீர் வழக்குப்பதிவு… என்ன காரணம்?

கூகுள் நிறுவனத்தின் மீதும் அந்நிறுவனத்தின் செயல்தலைவர் சுந்தர்பிச்சை

இந்தியாவில் கொகைன் கொடுத்து மிரட்டினார்கள்… பிரபல வீரர் கூறிய திடுக்கிடும் தகவல்!

ஜிம்பாபே அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான பிரண்டன் டெய்லர் தன்னை இந்தியாவில் உள்ள தொழிலதிபர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விஜய் காட்டிய பச்சைகொடியால் ரசிகர்கள் குஷி!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.