மறுபடியும் 2 அணிகள்.. விளையாட்டில் நேர்மை இல்லை.. கமல்ஹாசன் அடுக்கடுக்கான விமர்சங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,December 30 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 90 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் இரண்டே வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற உள்ளது. கிரான்ட் பினாலே நிகழ்ச்சிக்கு தகுதி பெறுபவர்கள் யார் யார் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும் என்பதும் தகுதி பெற்றவர்களில் டைட்டில் வின்னர் யார் என்பதும் தெரிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கிரான்ட் பினாலே நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிலையில் கூட உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக தான் பிரிந்து விளையாடுகிறார்கள் என்றும் தனித்து விளையாட கிட்டத்தட்ட மறந்து விட்டார்கள் என்பதையும் பார்வையாளர்கள் கவனித்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது மாயா, பூர்ணிமா, நிக்சன், விசித்ரா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் ஒரு அணியாகவும் தினேஷ், விஷ்ணு, மணி, ரவீனா ஆகியோர் ஒரு அணியாகவும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அர்ச்சனா மட்டும் இரண்டு அணிகளிலும் ஒட்டாமல் அதே நேரத்தில் இரண்டு அணிகளையும் எதிர்த்துக் கொள்ளாமல் தனித்தன்மையுடன் விளையாடி வருவதாக தெரிகிறது.

அதைத்தான் இன்றைய இரண்டாவது புரோமோவில் கமல்ஹாசன் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய இரண்டாவது புரமோவில், ‘போன வாரம் பெற்றோர்கள், குடும்பத்தார்கள் வந்திருந்தார்கள், அதற்கு முந்தின வாரம் கலை சூழ்ந்திருந்தது. இப்போது அவையெல்லாம் விலகி மறுபடியும் போட்டி மும்முரம் ஆகி உள்ளது.

அதில் நமக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால் இரண்டு அணியாக மறுபடியும் பிரிந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய விளையாட்டில் நேர்மை இருந்திருக்கிறதா? இல்லையா? என்பதை அவர்களிடம் கேட்போம் என்று கமல்ஹாசன் கூறுவதுடன் இன்றைய புரோமோ முடிவுக்கு வருகிறது. இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுவது குறித்து கமல்ஹாசன் அடுக்கடுக்கான கேள்விகளை அவர்களிடம் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல்ஹாசனின் அடுத்த பட டிரைலர் எப்போது? இயக்குனர் தகவல்.. இன்னும் இத்தனை நாள் இருக்கிறதா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் டிரைலர் எப்போது என்ற தகவலை அந்த படத்தை இயக்கி வரும் இயக்குனர் தெரிவித்துள்ள நிலையில் இன்னும் 93 நாள் இருப்பதாக ரசிகர்கள் கணக்கிட்டு உள்ளனர்.

'தளபதி 68' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டில் தான்: படப்பிடிப்பு தளத்தில் வெங்கட்பிரபு..!

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் அடுத்த கட்டமாக

நிவாரண பொருட்கள் வேண்டாம், செல்பி ஒன்றே போதும்.. விஜய்யை ஆச்சரியப்படுத்திய ரசிகை..!

தளபதி விஜய் இன்று நெல்லை உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னுடைய கையால் நிவாரண பொருட்களை வழங்கிய நிலையில் தனக்கு நிவாரண பொருட்கள் வேண்டாம்,

விஜயகாந்த்தை நினைத்து புன்னகைக்க நிறைய இருக்கின்றது: பிக்பாஸ் மேடையில் கமல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 90 வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் கமல்ஹாசன், விஜயகாந்த் குறித்த தகவல்களை பிக்பாஸ் மேடையில் பார்வையாளர்கள்

உள்ளே இருந்தபோது நான் ஒரு குரூப்பை நம்பி ஏமாந்து விட்டேன்: சரவணன் விக்ரம்

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சரவணன் விக்ரம் சமீபத்தில் எவிக்ட்டான நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல விஷயங்களை அவர் மனம் திறந்து பேசி உள்ளார்.