'விஸ்வரூபம்' பிரச்சனையின்போது என்ன நடந்தது? ஈரோடு பரப்புரையில் கமல்ஹாசன் விளக்கம்..!

  • IndiaGlitz, [Monday,February 20 2023]

கமல்ஹாசன் நடித்த ’விஸ்வரூபம்’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தின் ரிலீசின்போது என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டது என்பதை ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின் போது கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நான் ’விஸ்வரூபம்’ என்ற படம் எடுத்த போது என்னை தடுமாற வைத்து சிரித்தார் அந்த அம்மையார், அப்போது கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டார், உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் நான் இருக்கிறேன் என்று தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் என்னிடம் கூறினார் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஆனால் நான், ‘இது ஒன்றும் தேச பிரச்சனை அல்ல, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரிடம் கூறினேன்’ என கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது தெரிவித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ’விஸ்வரூபம்’ திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் அந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இருந்ததாகவும் அதனால் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தமிழகத்தில் ’விஸ்வரூபம்’ திரைப்படம் தடை செய்யப்பட்டது என்பதும் அதன் பின் சில நாட்கள் கழித்து நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு ’விஸ்வரூபம்’ திரைப்படம் வெளியானது என்றும் குறிப்பிடத்தக்கது.

More News

தென்னிந்திய அளவில் வரவேற்பு.. 'பகாசூரன்' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் பிரபலம்..!

சமீபத்தில் வெளியான மோகன்ஜி இயக்கத்தில் உருவான 'பகாசூரன்' திரைப்படம் தென் இந்திய அளவில் பிரபலம் ஆகி வருவதற்கு தனது வாழ்த்துக்கள் என பாலிவுட் பிரபலம் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து

'ஓடிப்போகலாமா' நடிகை கிரிஜாவை ஞாபகம் இருக்கின்றதா? நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி..!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'இதயத்தை திருடாதே' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை கிரிஜா நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

ஜிகுஜிகு கிளாமர் உடையில் கீர்த்தி சுரேஷ்.. ஹாட் புகைப்படங்கள்..!

 தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது ஜிகுஜிகு என கிளாமர் உடையில் தோற்றமளித்தது ரசிகர்களை பெரும்

சிவராத்திரி தினத்தில் வெளிநாட்டு குளத்தில் புனித நீராடிய அமலாபால்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அமலாபால் வெளிநாட்டில் உள்ள கோவில் ஒன்றில் சிவராத்திரி தினத்தில் புனித நீராடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

ஈஷா யோகா மையத்தில் ஜக்கியுடன் சிவராத்திரி நடனமாடிய தமன்னா.. வைரல் வீடியோ..!

 ஒவ்வொரு ஆண்டும் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா விசேஷமாக நடைபெறும் என்பதும் இதில் பல திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே