என்ன விமர்சனம் செய்ய நீங்க யாரு? கமல் பேச்சால் அதிர்ச்சி அடைந்த மாயா-பூர்ணிமா..!

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய புரமோவில் மாயா மற்றும் பூர்ணிமா பேசியதை கமலஹாசன் ’என்னை விமர்சனம் செய்ய நீங்க யாரு’ என்று ஆவேசத்துடன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் சில சம்பவங்களை குறிப்பிட்டு இந்த வாரம் கமல்ஹாசன் இதை கேட்டே ஆக வேண்டும் என்று விவாதித்தனர். இந்த நிலையில் இன்றைய புரமோவில் ’விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர் யார் என்று கேள்வி எழுப்பியபோது நிக்ஸன், ஜோவிகா உட்பட ஒரு சிலர் அர்ச்சனாவை கூறினார்.

விஷ்ணுவும் அர்ச்சனாவை கூறிய போது இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டது. அப்போது கமல்ஹாசன் ’என்னை கேட்டீர்கள், அவங்கள கேட்டீர்களா? என்று எனக்கு நீங்கள் ஞாபகப்படுத்துகிறீர்கள். நான் எதையெல்லாம் விமர்சிக்கனும் என்று நீங்கள் முடிவு பண்ண முடியாது. இந்த வார கடைசியில இதை கேட்கலைன்னா பாருங்கன்னு சொல்றீங்க, என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க நீங்க’ என்று ஆவேசமாக கேட்க இது குறித்து விவாதித்த பூர்ணிமா மற்றும் மாயா அதிர்ச்சியுடன் அமைதியாக உட்கார்ந்து இருந்தனர்.

இதனை அடுத்து பார்வையாளர்கள் கைத்தட்டல் விண்ணை பிளந்தது. ஆனால் அதே நேரத்தில் புரோமாவில் கமல்ஹாசன் ஆவேசமாக பேசுவதாகவும் ஆனால் எபிசோடில் அவர் மாயா-பூர்ணிமா செய்த தவறுகளை கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடுகிறார் என்றும் கூறி வருகின்றனர்.

கமல்ஹாசனின் ஆவேசம் எபிசோடிலும் தொடருமா? அல்லது வழக்கம் போல் மாயா பூர்ணிமாவை பூசி மெழுகி விமர்சனம் செய்து விட்டு கடந்து விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம் .. 'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து சமுத்திரக்கனி..

கடந்த சில நாட்களாக 'பருத்திவீரன்' பிரச்சனை குறித்து அமீர் மற்றும் ஞானவேல் ராஜா மாறி மாறி பேட்டி அளித்து கொண்டிருக்கும் நிலையில் அமீருக்கு ஆதரவாக ஏற்கனவே சசிகுமார் தனது சமூக வலைதளத்தில்

'லூப் தொடர்கிறது': வெங்கட்பிரபுவின் பதிவுக்கு என்ன அர்த்தம்..!

இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் 'லூப் தொடர்கிறது' என பதிவு செய்துள்ளதை அடுத்து விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

எனக்கும் விசித்ராவுக்கு நடந்தது போல் நடந்துள்ளது: 'காதல்' நடிகை அதிர்ச்சி தகவல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா சமீபத்தில் நடந்த பூகம்பம் டாஸ்க்கில் தனக்கு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை கூறினார்

வனிதாவை இருட்டில் தாக்கிய மர்ம மனிதர்கள் யார்? அதிர்ச்சி புகைப்படம்..!

நடிகை வனிதாவை நள்ளிரவில் மர்ம மனிதர்கள் சிலர் தாக்கி உள்ள நிலையில் அவர் காயத்துடன் உள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து

பிக்பாஸ் வீட்டின் மீது செருப்பை எரிந்த பூர்ணிமா.. சனம் ஷெட்டியின் ஆத்திரமான பதிவு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பூர்ணிமா மற்றும் மாயா செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.