கள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.. கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Thursday,June 20 2024]

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 30 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திரை உலகில் இருந்தும் தளபதி விஜய், சரத்குமார், உள்பட சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்.

தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

போதைக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

More News

'புஷ்பா 2' ரிலீஸ் தள்ளி வைக்க துணை முதல்வர் காரணமா? அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று ரிலீஸ் செய்தி

கள்ளச்சாராய மரணத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? சரத்குமாரின் அடுக்கடுக்கான கேள்விகள்..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகர் சரத்குமார் வருத்தம் தெரிவித்து

தமிழக அரசின் அலட்சிய போக்கே காரணம்.. கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து பா ரஞ்சித்..!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 30 பேர்கள் வரை பலியான சம்பவத்திற்கு ஏற்கனவே தளபதி விஜய் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் தமிழக அரசுக்கு கண்டனம்

நடிகர் விமல் அடுத்த படத்தில் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இரண்டு நடிகைகள்.. வைரல் புகைப்படம்..!

விமல் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு போட்டியாளர்கள் நடிக்க உள்ள நிலையில் இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தீபிகா படுகோன் பேபி பம்ப் போட்டோஷூட்.. குவியும் திரையுலக பிரபலங்களின் ரியாக்சன்..!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவர் முதல்முறையாக பேபி பம்ப் போட்டோஷூட்  புகைப்படங்களை தனது