ராகுல்காந்தி மனிதநேயம் மிக்கவர்: கமல்ஹாசன் பேட்டி

  • IndiaGlitz, [Sunday,March 11 2018]

சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அளித்த பேட்டி ஒன்றில் 'ராஜீவ் காந்தி கொலையாளிகளை தாமும் தன்னுடைய சகோதரியும் மன்னித்துவிட்டதாக கூறியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த கருத்து குறித்து கமல்ஹாசன் சற்றுமுன் அளித்த பேட்டியில் கூறியபோது, 'ராஜீவ் காந்தி கொலையாளிகளை அவர் மன்னித்துவிட்டதாக கூறியது அவரது மனைத நேயத்தை காட்டுகிறது' என்று கூறினார்.

மேலும் இந்துக்களை எதிர்ப்பதற்கு கிறிஸ்துவமிஷனரி தனக்கு உதவுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எனக்கு சிரிப்பதை தவிர வேறு என்றும் தோன்றவில்லை என்றும் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்தை தாம் வரவேற்பதாகவும் கமல் இந்த பேட்டியில் கூறியிருந்தார்

மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்று ரஜினிகாந்த் கூறியதை தான் தள்ளி நின்று மட்டும் பார்ப்பதாக கூறிய கமல், அரசியலில் வெற்றி பெற சினிமா பிரபலம் மட்டும் போதாது என்பதை அறிந்தவன் நான்' என்றும் கூறினார்.