எம்ஜிஆர் இருந்திருந்து கலைஞர் இறந்திருந்தால்? கமல்ஹாசன் 

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மறைந்த சோகம் திமுக தொண்டர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவருக்கு மெரினாவில் இடமில்லை என்ற தமிழக அரசின் முடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. ஐந்து முறை முதல்வராகவும், 16 முறை எம்.எல்.ஏவாகவும், அரை நூற்றாண்டுக்கும் மேல் அரசியலில் இருந்த முதுபெரும் தலைவருக்கு மெரினாவில் இடமில்லை என்பதை திமுக தொண்டர்கள்களால் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளதாவது:

அண்ணா இருந்தபோது கழகம் காத்திட வளர்ந்த இரு தம்பிகள் கலைஞரும் எம்ஜிஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்ஜிஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்ஜிஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால், கண்டிப்பாய் அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார். இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

கருணாநிதி மறைவு: குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சற்று முன் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்குக் இறுதியஞ்சலி செலுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கருணாநிதியின் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் அவருக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில் திரையுலக பிரமுகர்களும் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் வைக்கப்படும் இடங்கள் மற்றும் நேரம் குறித்த தகவல்

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு காலமானதை அடுத்து தமிழக மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

காலத்தை வென்று நிற்பார் கலைஞர்: கவிப்பேரரசு வைரமுத்து

திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானதை அடுத்து திமுக தொண்டர்களும் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களும், அரசியல் பிரமுகர்களும்,

கருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லை: தமிழக அரசு அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்கோளாறு காரணமாக இன்று மாலை காலமானதை அடுத்து திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் மீளா சோகத்தில் மூழ்கியுள்ளனர்.