கள்ளக்காதல் குற்றமல்ல என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Friday,September 28 2018]

நேற்று சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஒரு தீர்ப்பில் திருமணத்திற்கு பின்னர் 'தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல என்றும் திருமணத்திற்கு பின்னர் தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் தனது கருத்தை இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

நான் எப்போதுமே கொஞ்சம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவன். திருமணத்திற்கு பின்னர் வேறொருவருடன் உறவு என்பதில் தவறில்லை. நம்முடைய புராணத்தில் கூட இந்த அளவு திறந்த மனம் உள்ளது. இன்றைய நவீனயுகத்தில் ஆணுக்கும் பெண்ணும் சமமான ஒரு நிலை வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை என்றே கருதுகிறேன். நான் இதுகுறித்து வாதம் செய்ய விரும்பவில்லை, நீங்கள் யோசித்து பார்த்தால் கலாச்சாரம் ஐம்பது வருடங்களுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்கும்' என்று கூறியுள்ளார்.

 

More News

மறுபடியும் முதல்ல இருந்தா? பிக்பாஸ் வீட்டில் 16 பேர்

பிக்பாஸ் நிகழ்ச்சியை முதலில் திட்டமிட்டபடி 100 நாட்களிலேயே முடித்திருக்கலாம். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த சம்பவங்கள் மட்டுமே தொகுக்கப்பட்டது.

நிஜ சந்திரனை அவர்கள் பார்த்தது கிடையாது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கமல் பதில்

தமிழகத்தில் புதிது புதிதாக கட்சிகள் தோன்றுவதாகவும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல புதிய கட்சிகள் அதிகபட்சம் நான்கு அமாவாசைகள் தாண்டாது என்றும் சமீபத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருந்தார்

வனிதா விஜயகுமாருடன் நெருக்கம் குறித்து நடன இயக்குனர் ராபர்ட் விளக்கம்

கடந்த சில நாட்களாக நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வனிதா விஜயகுமாருக்கும் பங்களாவை வாடகை விட்ட விவகாரம் குறித்து பரபரப்பான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் உள்பட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சற்றுமுன்னர் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பு

சபரிமலை கோவில் தீர்ப்பு குறித்து கமல், குஷ்பு கருத்து

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்ற அமர்வு இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.