கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,June 27 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனுடன் முதல்முறையாக நடிக்கும் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த படத்தின் இயக்குனர் ராஜீவ்குமாருக்கு திடீரென உடல்நலை சரியில்லாமல் போனதால் இயக்குனர் பொறுப்பையும் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டார். கடந்த சில நாடுகளுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பில் ரம்யாகிருஷ்ணன் மற்றும் பிரம்மானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முடிந்துவிட்டதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக 'சபாஷ் நாயுடு' குழுவினர் அமெரிக்காவின் இன்னொரு நகருக்கு செல்லவுள்ளதாகவும் இதுகுறித்த கூடுதல் தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். லைகா புரடொக்ஷன்ஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிகின்றார்.

More News