close
Choose your channels

குருட்டுத் தாத்தாவின் கண்ணுடைப் பேரன்: பிரபல இயக்குனரின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை..!

Saturday, June 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சீனி ராமசாமி தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதிய கவிதைக்கு பதில் கவிதை கமல்ஹாசன் எழுதி இருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபல இயக்குனர் சீனி ராமதாஸ் ராமசாமியின் கவிதை இதோ:

குரு சங்கரன்
...........................
இன்னும் வராது
பள்ளிக்கு போன
சங்கரனை தேடுகிறார்
சங்கரன் தாத்தா.

வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

மாலை வெயிலில் அலைகிறார்
விரல் தடுக்காமல்
பாதங்களை ஊன்றிப் பார்க்கிறார்.

நடக்கமுடியாது

"சங்கரா சங்கரா
இருட்டுதுடா
தாத்தாவுக்கு
கண் தெரியலடா".

இருள் கவியும்
ஓசைக்கிடையில்
எங்கிருந்தோ
ஓடி வந்தான் சங்கரன்.

"தாத்தா சேவல் சுருட்டு வாங்கிட்டு வர்றேன்
நீ எதுக்கு வந்த" என்றான்.

"இதுக்கா பெரிய ரோட்டத் தாண்டிப் போன ஏய்யா?

"நீ போவியே
அப்புறம் நா தேடுவனே"

"நீ தேடுவயா..
அப்பாடி..
வேணாம்பா
வா.."

தேடி வருபவரிடம்
தேடி வருவது போலொரு அன்பு

சங்கரன் விரல்
பற்றி நடந்த சங்கரன் தாத்தா அவனின் வாத்தியார் போல முழுப்பெயர் சொன்னார்.

"அலைய விட்டுடயே
குருசங்கரசாமி
பாத்துவா"

"நீ பாத்துவா தாத்தா"
என்றான்
சங்கர தாத்தாவின்
பேரன்
சங்கரன்.

இந்த கவிதைக்கு கமல்ஹாசன் எழுதிய பதில் கவிதை இதோ:

இக்குருட்டுத் தாத்தாவின்
கண்ணுடைப் பேரன்
கல்வியாளன் அல்ல.
கவியை ஊன்றி நடக்கும்
என்னிளம் பேரா
என்றேனும் பள்ளி செல்ல மறக்காதே
அல்லேல்
என்போலே அலைவாய்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment