கமல் போட்டியிட போகும் தொகுதி எது?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் வரும் தேர்தலில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது கமல்ஹாசன் நான்கு தொகுதிகளை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் இந்த நான்கு தொகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மயிலாப்பூர், ஆலந்தூர், தி.நகர் மற்றும் வேளச்சேரி ஆகிய 4 தொகுதிகளில் ஒன்றில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக ஆலந்தூர் தொகுதியில் அவர் போட்டியிட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

இதற்கு முன்னர் ஆலந்தூர் தொகுதி பரங்கிமலை என்ற தொகுதியாக இருந்த போது எம்ஜிஆர் அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக 1967 மற்றும் 1971 ஆகிய இரண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதும் அதனை கணக்கில் கொண்டு அந்த தொகுதியில் கமலஹாசன் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பெருவாரியான ஓட்டுகளை பெற்றுள்ளது என்பதும் இந்த தொகுதியை கமல் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

ராதிகாவின் 'சித்தி' கேரக்டரில் நடிக்கும் சித்தி மகள்?

நடிகை ராதிகா நடித்த சித்தி தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவர் அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

என்னை இமயத்தின் உச்சியில் உட்கார வைத்துவிட்டார்: மாரி செல்வராஜ் குறித்து மாரியம்மாள்!

தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற பாடலை பாடிய மாரியம்மாள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மாரி செல்வராஜ் அவர்கள் என்னை

முதல்வர் விழாவில் புளிசாதம் சாப்பிட்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம்!

விராலிமலை அருகே தமிழக முதல்வர் கலந்து கொண்ட விழாவில் பங்கேற்று அங்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 46 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது

ஐபிஎல் ஏலத்தில் ஒரு இலங்கை வீரர் கூட இல்லை ஏன்? உண்மையை உடைக்கும் முன்னாள் வீரர்!

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி துவங்கப்பட்டது.

நிரூபிக்கப்படாத மருந்தை ஏன் பரிந்துரை செய்கிறீர்கள்? ஷர்வர்தனுக்கு ஐஎம்ஏ சரமாரி கேள்வி!

அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யாத கொரோனில் மருந்தை ஏன் கொரோனா வைரஸ் துணை சிகிச்சை மருந்தாகப் பரிந்துரைக் கிறீர்கள் என மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ