ஆபரேசன் நடந்த காலில் மீண்டும் காயம்: பிரச்சாரத்தை தொடர்வாரா கமல்?

  • IndiaGlitz, [Saturday,March 20 2021]

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் தனது காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வு எடுத்த பின் தற்போது அவர் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்

இந்த நிலையில் இன்று காலை அவர் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். கோவை பூ மார்க்கெட் அருகே அவர் நடைபயிற்சி மேற்கொண்டே பிரச்சாரம் செய்த போது அவருடன் செல்பி எடுக்க ஆர்வத்துடன் சிலர் கூடினர். அப்போது ஒவ்வொரு சிலர் தவறாக கமலின் காலை மிதித்து விட்டதாக தெரிகிறது

இதனை அடுத்து அவரது ஆபரேசன் செய்த கால் வீங்கி விட்டது என்றும் இதுகுறித்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆபரேஷன் செய்த காலில் வீக்கம் இருப்பதால், கமல்ஹாசன் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதனை அடுத்து அவர் தனது பிரச்சாரத்தில் சில மாற்றங்கள் செய்யப்போவதாகவும் இடையிடையே ஓய்வு எடுத்து அதன் பின் அவர் பிரசாரம் செய்வார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

More News

விஜய்யை அடுத்து இந்த மாஸ் நடிகருடன் ஜோடி சேரணும்: மாளவிகா மோகனின் ஆசை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் பூங்கொடி என்ற சின்ன கேரக்டரில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதனை அடுத்து தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக

அஜித் படத்திற்கு இசையமைக்கும்போது நான் பார்ப்பது இது ஒன்றை தான்: யுவன் ஷங்கர் ராஜா

அஜித் நடித்து வரும் 'வலிமை' திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் படங்களுக்கு இசையமைக்கும் போது

'காஞ்சனா 3' நடிகைக்கு கொரோனா பாதிப்பு: தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவிப்பு!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அரசின் கட்டுப்பாடுகளும் அதிகரிக்கும்

அஜித்தின் 'வரலாறு' நாயகி கனிகாவின் கணவர் மற்றும் மகன் புகைப்படம்!

அஜித் நடித்த 'வரலாறு' சேரன் நடித்து இயக்கிய 'ஆட்டோகிராப்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கனிகா. தற்போது கூட அவர் விக்ரமின் 'கோப்ரா' என்ற படத்தில் நடித்து வருகிறார்

இதுதான் நான் நடித்த முதல் பாடல் காட்சி: டீன் ஏஜ் புகைப்படத்தை வெளியிட்ட நதியா!

கடந்த 1985ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் உருவான 'பூவே பூச்சூடவா' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன் பின்னர் அவர் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி