தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம்: விழித்தெழு என்று கூறிய கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்குவதற்கு முன்பே அவர் தமிழக அரசு பல துறைகளில் செயலற்று இருப்பதை தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டி வந்தார். இந்த நிலையில் மேலும் ஒரு தமிழக அரசின் துறை செயலற்று இருப்பது குறித்து தெரிவித்துள்ளார். அந்த துறை தான் மாசுக்கட்டுப்பாடு துறை. இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது:

மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது . தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம் . மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு

சமீபத்தில் சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாய் பாதிப்புகளில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமே குற்றவாளி என்றும், காவிரி படுகையில் செயல்படும் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை தமிழக மாசுக்கட்டுபபாடு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறியிருந்தார். இதே கருத்தை இன்று கமல் அவர்களும் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் ஒரே நாளில் மோதும் அஜித்-விஜய் படங்கள்

அஜித்தின் வேதாளம், விஜய்யின் மெர்சல், விஜய்சேதுபதியில் விக்ரம்வேதா உள்ளிட்ட ஒருசில படங்கள் சென்னையில் மறுவெளீயிட்டாக திரையிடப்படவுள்ளது.

நாச்சியார் தெலுங்கு ரீமேக்கில் நம்பர் ஒன் நடிகை?

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த 'நாச்சியார்' திரைப்படம் மூன்றாவது வாரமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது

கார்த்தியின் மெகா பட்ஜெட் படத்தின் முக்கிய அறிவிப்பு

கார்த்தி ரகுல் ப்ரித்திசிங் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று'; திரைப்படம் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த நிலையில் கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் இணையும் படத்தின் அறிவிப்பு .

அஜித்துக்கு முதல்முறை, நயனுக்கு 3வது முறை: விசுவாசம் அப்டேட்

தல அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகை ஸ்ரீதேவி: துபாயில் மரணம், மும்பையில் தகனம், தமிழகத்தில்....?

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் எதிர்பாராத வகையில் திடீரென மரணம் அடைந்தது அவரது குடும்பத்தினர் மட்டுமின்'றி ரசிகர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது.