கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தில் மேலும் 2 பிரபலங்கள்.. அதுவும் இவரை எதிர்பார்க்கவே இல்லையே?

  • IndiaGlitz, [Tuesday,April 30 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிலையில் தற்போது டெல்லியில் நடைபெற்று வருவதாகவும் சிம்பு உட்பட ஒரு சிலரின் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் கமல்ஹாசன் டெல்லி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் அதன் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘தக்லைஃப்’ திரைப்படத்தில் ஏற்கனவே கமல்ஹாசனுடன் சிலம்பரசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா, கௌதம் கார்த்திக், அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பாலிவுட் பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தக்லைஃப்’ திரைப்படத்தில் ‘மிர்சாபூர்’ தொடர் உட்பட பல தொடர்கள் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்த பங்கஜ் திரிபாதி இணைந்து உள்ளதாகவும் அவருக்கு ஒரு முக்கியமான கேரக்டர் என்றும் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் இணைவார் என்பதை எதிர்பார்க்கவே இல்லை என்று கூறப்படுகிறது.

அதேபோல் பிரபல பாலிவுட் நடிகர் அலிபாசல் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இணைகிறார் என்றும் தெரிகிறது. தற்போது அலிபாசல், சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படப்பிடிப்பில் பங்கஜ் திரிபாதி இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இது ஒரு பான் இந்திய படம் என்பதை குறிக்கும் வகையில் பல நட்சத்திரங்கள் இணைந்து வருவது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

More News

2024 குரு பெயர்ச்சி: ஆலங்குடி கோவிலில் பிரமாண்ட வைபவம்!

ஆலங்குடி, தமிழ்நாடு: உலக பிரபலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் வரும் மே 1ம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தீபா அக்கா : கண்ணுமுன்னாடி அம்மா உயிர் போனது ! யாரும் அறியாத தீபாவின் மறுபக்கம்

குக் வித் கோமாளி சீசன் இரண்டில்(Cook with Comali Season 2) பங்கு பெற்ற தீபா அக்கா பலரை அந்த நிகழ்ச்சியின் மூலம் சிரிக்க வைத்துள்ளார்.

புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும் ! செல்வராகவனின் பதிவால் பரபரப்பு..

இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சில தத்துவ கருத்துக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை இணையத்தில் வைரலாகும் என்பதும் தெரிந்தது

பிரபல இளம் நடிகை தூக்கில் தொங்கி தற்கொலை.. கடைசி வாட்ஸ்அப் பதிவில் அதிர்ச்சி தகவல்..!

இளம் நடிகை ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது கடைசி வாட்ஸ் அப் பதிவில் உள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை போய் 4500 ரூபாய்க்கு வாங்கின முட்டாள் நீங்க தான்.. கஸ்தூரி வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்..!

நடிகை கஸ்தூரி சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரூபாய் 4500க்கு வாங்கிய செருப்பு டேமேஜ் ஆகிவிட்டதாக பதிவு செய்த நிலையில் இந்த செருப்பை நான் 150 ரூபாய்க்கு