உழைப்பால் கிடைக்கும் உயர்வு தாமதமாகலாம், தடைபடாது: கமல்ஹாசனின் மே தின டுவீட்

  • IndiaGlitz, [Friday,May 01 2020]

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி மே தின கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் இந்த கொரோனா பரபரப்பிலும் பல நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் மே தின கொண்டாட்டம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் மே தின வாழ்த்துக்களை குடியரசு தலைவர், பிரதமர் முதல் அனைத்து அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மே தினம் குறித்து கூறியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை கட்டமைத்திடும் ஒவ்வொரு தொழிலாளியின், தனி பொருளாதாரமும் பலப்பட வாழ்த்துகிறேன். உழைப்பை மூலதனமாக்கி உயரும் வாழ்வு தாமதமாகலாம், தடைபடாது. இந்நிலை மாறும், தொழிலாளர் வாழ்வு ஏற்றம் பெறும். நம்பிக்கையுடன்.. என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த டுவிட்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருவதோடு, சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1793 பேர்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,610 லிருந்து 35,403ஆக அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1793 பேர்கள் கொரோனாவால்

மார்க்கெட்டை மாற்றியும் மாறாத மக்கள்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்தான்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் பழங்கள் மற்றும் பூக்கள் மொத்த விலையிலும் சில்லறை விலையிலும் விற்பனை ஆகி வந்ததால் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது

ரஜினி வசனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்த அஜித்-விஜய் நாயகி

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது

ஒரே நாளில் 22, மொத்தம் 38: கொரோனாவை உற்பத்தி செய்யும் கோயம்பேடு மார்க்கெட் 

கோயம்பேடு மார்க்கெட் கொரோனாவை உற்பத்தி செய்யும் மார்க்கெட்டாக மாற வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள

தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை: மருத்துவ நிபுணர் குழு தகவல்

தமிழ்நாட்டில், ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இல்லை என தமிழக அரசு நியமித்துள்ள மருத்துவ ஆலோசனைக்குழு, தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது