கமல்ஹாசனின் 'ஆளவந்தான்' ரிலீஸ் தேதி இதுதான்.. நாளை ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ்..!

  • IndiaGlitz, [Friday,November 17 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘ஆளவந்தான்’ திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் மீண்டும் இந்த படம் டிஜிட்டலில் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்திருந்தார்

20 வருடங்களுக்கு முன் வெளியான இந்த படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து டிஜிட்டலில் மீண்டும் ரீரிலிஸ் ஆக இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘ஆளவந்தான்’ திரைப்படம் எட்டுத்திக்கும் எதிரொலிக்க டிசம்பர் 8ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி ’கடவுள் பாதி மிருகம் பாதி’ என்ற கவிதை பாடல் நாளை மாலை 5.03 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

20 ஆண்டுகளுக்கு முன்பே கமல்ஹாசன் பாடிய இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற நிலையில் மீண்டும் வித்தியாசமாக வெளிவர இருப்பது கமல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நாளை முதல் தளபதி விஜய் நூலகம்.. சென்னையில் திறக்கப்படும் 2 இடங்கள் இவைதான்..!

நாளை முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் தளபதி விஜய்  நூலகம் திறக்கப்பட இருப்பதாகவும் சென்னையில் இரண்டு இடங்களில் தானே நூலகத்தை திறந்து வைக்க போவதாகவும்

'தங்கலான்' படத்தின் அப்டேட் கொடுத்த ஹாலிவுட் நடிகர்.. வைரலாகும் பதிவு..!

 ஹாலிவுட் நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் 'தங்கலான்' படத்தின் அப்டேட்டை பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உடம்பு சுகம் இல்லை என்றாலும் மனசு நன்றாக இருக்குது.. வைரலாகும் கமல்ஹாசன் ஆடியோ..!

உடம்பு சுகம் இல்லை என்றாலும் மனசு நன்றாக இருக்குது என்ற கமல்ஹாசன் ஆடியோவை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த ஆடியோ

சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய சூர்யா? அடுத்த படம் இதுதானா?

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் சூர்யா வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது  

ஜெயிலுக்கு போக முடியாது... விசித்ராவின் முடிவை அடுத்து கேப்டன் எடுத்த அதிரடி முடிவு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் மோசமாக விளையாடியதாகவும், இதனை அடுத்து இருவரும் ஜெயிலுக்கு போக வேண்டும் என்றும் அனைத்து