பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன்: தொகுதியை அறிவித்த கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Friday,September 22 2023]

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட போவதாக உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்று கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். கோவையில் தனக்கு பெரும் ஆதரவு இருப்பதாக கூறிய கமல்ஹாசன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் தான் போட்டியிடுவேன் என்று தெரிவித்தார். மேலும் 40 தொகுதிகளிலும் தொண்டர்கள் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கோவை கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆன்லைனில் 'ஜவான்': வாட்ஸ் அப், டெலிகிராமுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

'ஜவான்' திரைப்படத்தின் பிரதியை சட்ட விரோதமாக பகிர்ந்தவர்கள் அடையாளத்தை வெளியிடுமாறு வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் நிறுவனத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்டசபையில் மீசையை முறுக்கி தொடையை தட்டிய பாலகிருஷ்ணா.. பதிலடி கொடுத்த ரோஜா..!

ஆந்திர மாநில சட்டசபையில் மீசையை முறுக்கி தொடையை  நடிகர் பாலகிருஷ்ணா தட்டிய நிலையில் அதற்கு அமைச்சரும் நடிகையுமான ரோஜா பதிலடி கொடுத்துள்ளார்.  

'லியோ' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? 'மாஸ்டர்' 'விக்ரம்' படங்களை விட குறைவுதான்..!

 தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

'தலைவர் 170' படப்பிடிப்பு எங்கே? எப்போது? ரஜினி பேசப்போகும் புதிய ஸ்லாங்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் கசிந்து உள்ளது .

'மார்க் ஆண்டனி' தயாரிப்பாளரின் அடுத்த படம்.. இயக்குனர் இந்த பிரபலமா?

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்த 'மார்க் ஆண்டனி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 50 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது