என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க நீங்க.. அசீமை நேரடியாக எச்சரிக்கும் கமல்ஹாசன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று 42வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கடந்த வாரம் நடந்த ராஜா ராணி டாஸ்க்கில் அசீம் அத்துமீறி நடந்து கொண்டதாக கிட்டதட்ட அனைத்து போட்டியாளர்களும் நேற்று கமல்ஹாசனிடம் புகார் அளித்தனர்.

ஏற்கனவே ஒருமுறை அசீமுக்கு எச்சரிக்கை செய்த கமல்ஹாசன் நேற்று அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்தார். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோ வீடியோவில் கமல்ஹாசன் நேரடியாகவே அசீமை எச்சரிக்கை செய்கிறார்.

’இதுதான் உங்களுடைய விளையாட்டு தந்திரம் என்று முடிவு செய்து விட்டீர்கள் என்றால் நான் மற்றவர்களை எல்லாம் எச்சரிக்கை செய்வேன் என்று சொன்னேன். அதற்கு முதல் இரையானது ஏடிகே தான். லபோ திபோ என்று கத்தி அவர் கோட்டை கீழே போடும் போது கூட நீங்கள் கோவித்து கொள்ளாதே நான்தான் எடுத்தேன் என்று சொல்லிருந்தால் சரியாக இருந்திருக்கும்’ என்று கூறினார்.

இதனையடுத்து அசீம் விளக்கம் அளித்தபோது, ’ஒதுங்கி இருந்தால் ரொம்ப ஃபயரா இல்லையோ என நினைத்து இந்த வாரம் பண்ணினேன். போன வாரம் அமைதியாக இருந்தேன், எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்று தெரியலை’ என்று கூறினார்.

இதனை அடுத்து கண்டிக்கும் வகையில் கமல்ஹாசன், ‘நீங்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் நினைத்தபடி எல்லாம் இங்கே நடக்கும் என்று நினைக்காதீர்கள்’ என சீரியசாகவே கமல்ஹாசன் கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.